அதிரடியாய் களத்தில் இறங்கிய சீனா.. $64 பில்லியன் மதிப்பிலான பொருளாதார வழித்தட ஒப்பந்தம்

பெய்ஜிங் : சீனத் தலை நகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வழித்தட திட்டத்தின் இரண்டாவது கூட்டத்தில் 64 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக, சீனாவின் அதிபர் ஷி ஜின்பின் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வதேச பொருளாதார வழித்தடம் மூலம் ஆசிய, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளை சாலை வழியாகவும், கடல் வழியாகவும் இணைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் அந்த நாடுகளுடனான வர்த்தக உறவும் அதிகரிக்கும் என்றும் சீனா அறிவித்துள்ளது.

எனினும் இந்த திட்டம் பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ள நாடுகளில், சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே இதை முன்னெடுத்து வருகிறது. இதில் சில பங்குதாரர் நாடுகள் BRI இன் உயர் செலவு திட்டங்களை பற்றி புகார் அளித்திருக்கின்றன. இது 2013 இல் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். சில மேற்கத்திய அரசுகள் அதை வெளிநாடுகளில் சீன செல்வாக்கை பரப்ப வழிவகையாகக் கருதுகின்றன.

சமூக அபிவிருத்திக்கான திறனை வழங்குவதே நோக்கம்

சமூக அபிவிருத்திக்கான திறனை வழங்குவதே நோக்கம்

இந்தக் கூட்டத்தில் வெளியிடபட்டுள்ள இந்த கூட்டு அறிக்கை, பெல்ட் மற்றும் ரோடால் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கியத்துவமே பொருளாதாரத்தையும் மற்றும் இத்திட்டம் சமூக அபிவிருத்திக்கான திறனையும் வழங்குவதே என்று இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்தியா கல்ந்து கொள்ளவில்லை

இந்தியா கல்ந்து கொள்ளவில்லை

இந்த கூட்டத்தில் பிலிப்பைன்ஸ், கென்யா மற்றும் எகிப்தின் தலைவர்கள், இத்தாலி, கிரீஸ் மற்றும் பாக்கிஸ்தான் பிரதம மந்திரிகள், இந்தோனேசியா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளிலுள்ள மற்ற அதிகாரிகளும் இதில் பங்கேற்றதாகவும் சீன அறிவித்துள்ளது.

ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுக்கும்

ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுக்கும்

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் துறைமுகங்கள், இரயில்வே மற்றும் பிற உள்கட்டமைப்புகளை கட்டமைப்பதன் மூலம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முயற்சியை மற்ற அரசாங்கங்கள் வரவேற்றன. ஆனால் சிலர் சீன கடன்களை திருப்பிச் செலுத்துவதில் கஷ்டப்படுகின்றனர். இது ஒரு சாத்தியமான கடன் என்றாலும், பலர் சீன அரசின் இந்த கடன் பற்றி புகார் செய்கின்றனர், மேலும் இந்த முயற்சி ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.

எச்சரிக்கை பெய்ஜிங் செல்வாக்கை இழந்து வருகிறது

எச்சரிக்கை பெய்ஜிங் செல்வாக்கை இழந்து வருகிறது

இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெய்ஜிங் தனது செல்வாக்கை இழந்து வருகின்றன. சீனாவின் அரசியல் நோக்கங்களைப் பற்றியும் மற்றும் சாத்தியமான கடன் பிரச்சினைகள் பற்றியும் அமெரிக்க அரசாங்கங்கள் ஏற்கனவே மற்ற நாடுகளின் அரசாங்கங்களை எச்சரித்துள்ளன.

BRI  திட்டத்தில் ஆதரவு எண்ணிக்கை அதிகரிப்பு

BRI திட்டத்தில் ஆதரவு எண்ணிக்கை அதிகரிப்பு

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் , அமெரிக்க எதிர்ப்பு இருந்த போதினும், சீன அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 65 ல் இருந்து 115 என உயர்ந்துள்ளது என சுட்டிக் காட்டிள்ளது குறிப்டத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+