கியூபா நாட்டில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் இறக்குமதி பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு மூலம் அந்நாட்டின் பணவீக்கத்தை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் 2021-22ஆம் நிதியாண்டுக்கு 5.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், நாட்டில் விலைவாசி நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனை உடனடியாகக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கியூபாவில் 70 சதவீதம் பணவீக்கம் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
கியூபா நாட்டின் பணவீக்கம்
கியூபா நாட்டின் பணவீக்கம் 2021ஆம் ஆண்டின் முடிவில் 70 சதவீதமாக இருக்கும் எனவும், இந்த உயர்வுக்குப் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை மற்றும் இறக்குமதி பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு தான் காரணம் என அந்நாட்டில் நாடாளுமன்றத்தில் கியூபா நாட்டின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சரான அலெஜான்ட்ரோ கில் அறிவித்தார்.
அமைச்சர் அலெஜான்ட்ரோ கில்
மேலும் அலெஜான்ட்ரோ கில் தற்போது இருக்கும் 70 சதவீத பணவீக்கத்தை அடுத்த வருடம் 60 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ஜனவரி மாதம் புதிய பொருளாதார நடவடிக்கைகளைத் திட்டமிட்டு உள்ளதாகவும், குறிப்பாக இரண்டு அடுக்கு நாணய முறைக்குத் தடையும், முக்கியப் பொருட்களுக்கான விலையும் உயர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சரான அலெஜான்ட்ரோ கில்.
பெரும் சவால்
2022ல் பணவீக்கத்தைக் குறைப்பது தான் நாட்டின் பெரும் சவாலாக இருக்கும் எனவும் அலெஜான்ட்ரோ கில் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத நாடாளுமன்ற கூட்டத்தில் அலெஜான்ட்ரோ கில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை மூலம் வகைப்படுத்தாத சந்தையில் பொருட்களின் விலை 6,900 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை
இந்த மோசமான நிலைக்குக் கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையும் முக்கியமாகக் காரணம் என்றும் அலெஜான்ட்ரோ கில் தெரிவித்துள்ளார், அமெரிக்காவின் தடையால் பல ஆயிரம் கண்டெயினர் பொருட்கள் கியூபா நாட்டிற்கு டெலிவரி செய்யப்படாமலே கடலில் சிக்கியுள்ளது.
பொருட்களின் டிமாண்ட்
இதனால் பொருட்களின் டிமாண்ட் காரணமாக அதன் விலை அதிகரித்துப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார் கியூபா நாட்டின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சரான அலெஜான்ட்ரோ கில்.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
அமெரிக்கத் தடையால் கியூபா நாட்டின் சுற்றுலா துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ல் இந்நாட்டின் பொருளாதாரம் 11 சதவீதம் சரிந்தது, 2021ல் 2 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் 2022ல் 4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைய முடியும் எனக் கணித்துளளார் அலெஜான்ட்ரோ கில்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications