துபாய்: பிரம்மாண்ட கட்டிடம் மற்றும் வியப்பூட்டும் கட்டிட கலைக்கு பெயர்போன துபாய் நகரம் தற்போது உலகநாடுகள் மிரளும் வண்ணம் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே துபாய் விமான நிலையம் தான் பரப்பரமான விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இதை மிஞ்சும் வண்ணம் துபாய் வோல்டு சென்டரல் கட்டிடத்திற்கு 30 கிலோமீட்டர் அருகில் இப்புதிய விமான நிலைய அமைய உள்ளது.
கீரின்பீல்டு ஏர்போர்ட்
A380 ரக விமானங்கள் தாங்கும் வண்ணம், 5 ஒடுதளங்களை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய கீரின்பீல்டு விமான நிலையத்தை 32 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் முடிவடையும் போது உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக இது இருக்கும்.
பயணிகள்
இப்புதிய விமான நிலையம் துபாயில் அல் மக்தூம் என்ற பகுதியில் அமைய உள்ளது. முதற்கட்டமாக இவ்விமான நிலையத்தில் 120 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. விமான நிலையத்தின் முழுமையான வேலைகள் 2020ஆம் ஆண்டு முடியும்போது சுமார் 200 மில்லியன் விமான பயணிகள் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என துபாய் ஏர்போர்ட் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஜூலியஸ் பவுமான் தெரிவித்தார்.
200 விமானங்கள்
இந்த புதிய விமான நிலையம் 7 புட்பால் மைதானம் அளவிற்கு பெரிதாக இருக்கும், 5 ஒடுதளங்கள், 200 விமானங்களை நிறுத்தும் அளவிற்கு இடம் மற்றும் 4 முனைகளை இணைக்கும் 6 விமான நிலைய ரயில்கள் அவை நகரத்தின் மெட்ரோ முனையத்துடன் இணைக்கப்படும்.
போக்குவரத்து
இப்புதிய விமான நிலையத்தின் மூலம் வருடத்திற்கு 200 மில்லியன் பயணிகள் மற்றும் 12 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து செய்யப்படும்.
லண்டன்- துபாய்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பின் துபாய் விமான நிலையம் தான் மிகவும் பரப்பரப்பான விமான நிலையமாக உள்ளது. இங்கு விமான எரிபொருள் மலிவாக இருப்பதால் உலகில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் துபாய் நகரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு



Click it and Unblock the Notifications