சுந்தர் பிச்சை சென்ற ஆண்டு 650,000 டாலர்கள் சம்பளமாகப் பெற்றுள்ளார். இது 2015-ம் ஆண்டு இவர் வாங்கிய 652,500 டாலர்களை விடச் சற்று தான் அதிகம்.
தமிழகத்தின் மதுரையில் பிறந்து உலகின் மிகப் பெரிய இணையதளத் தேடல் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் 44 வயது ஆன சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டினை விட 2016-ம் ஆண்டு இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் பெற்றுள்ளார்.
சுந்தர் பிச்சை சென்ற ஆண்டு 650,000 டாலர்கள் சம்பளமாகப் பெற்றுள்ளார். இது 2015-ம் ஆண்டு இவர் வாங்கிய 652,500 டாலர்களை விடச் சற்று தான் அதிகம், இது எப்படி இரண்டு மடங்கு உயர்வு என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. வாங்க அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
பங்குகள்
சம்பளம் சற்று உயர்ந்து இருந்தாலும் நீண்ட காலமாகக் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு 99.8 மில்லியன் டாலர்கள் பதிப்புடைய பங்குகளைப் பெற்றார். இதுவே 2016-ம் ஆண்டு 198.7 மில்லியன் டாலர்கள் பங்குகளைப் பெற்றுள்ளார்.
பல வெற்றிகரமான தயாரிப்புகள்
கூகுள் நிறுவனம் சென்ற ஆண்டுப் பல வெற்றிகரமான தயாரிப்புகளை வெளியிட்டுச் சாதனை படைத்தது, அது இந்த ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் கூகுள் சுந்தர் பிச்சைக்குப் பெறும் சம்பளத்தை அளித்துள்ளது.
லாரி பேஜ்
லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனம் மற்றும் முன்னால் தலைமை செயல் அதிகாரியான இவர் ஆல்ப்பாபெட் அம்பெரல்லா நிறுவனத்தின் புதிய வணிகங்களைக் கண்காணிக்க இருக்கின்றார்.
செயல்படும் வணிகங்கள்
சுந்தர் பிச்சையின் தலைமையில் கூகுள் நிறுவனம் விளம்பரம் மற்றும் யூடியூப் வணிகத்தில் விற்பனை அதிகரித்தும், மெஷின் லர்னிங், வன்பொருள் மற்றும் கிளவுட் கம்யூட்டிங் போன்றவற்றிலும் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது.
புதிய வன்பொருட்கள்
2016-ம் ஆண்டுக் கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ரவுட்டர், மற்றும் குரல் கட்டுப்பாட்டில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்றவற்றை வெளியிட்டது. இந்த முயற்சியின் துவக்கத்தால் தான் அதிகச் சம்பளம் சுந்தர் பிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பிற வருவாய்கள்
கூகுள் நிறுவனம் வன்பொருள் உற்பத்தி, கிளவுட் சேவைகள் மூலமாக மட்டும் 3.1 பில்லியன் டாலர்கள் பெற்றதாக அன்மையில் வெளிவந்த காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, இந்தக் காலகட்டத்தில் சென்ற ஆண்டு வந்த லாபத்தை விட இது 50 சதவீதம் அதிகம் என்று கூரப்படுகின்றது.
ஆல்பபெட் பங்குகள்
ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகள் முதன் முறையாக 600 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து பெறும் உயரத்தை எட்டியுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications