ஏதென்ஸ்: கடன் நிலுவையைத் தீர்க்க கிரீஸ் வடிவமைத்த புதிய திட்டத்தை ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் நிதிஅமைச்சர்கள் கூடிய கூட்டத்தில் ஒப்புதல் பெற்றப்பட்டுள்ளதாகக் கிரீஸ் பொருளாதார அமைச்சர் Giorgos Stathakis தெரிவித்தார்.
இத்திட்டத்தை ஐரோப்பிய தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் Giorgos சம்பர்ப்பித்தார். இதனை முழுமையாக ஆய்வு செய்த பின் நிதியுதவி அளிப்பது குறித்த முடிவுகள் அளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரியே தாரக மந்திரம்
இப்புதிய திட்டத்தில் கிரீஸ் அமைச்சகம் வர்த்தகத்தில் புதிய வரி மற்றும் பணக்காரர்களின் சொத்துக்கள் மீதான கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக Giorgos செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒய்வுதியம்
அதேபோல் கிரீஸ் மக்களுக்கு அளிக்கப்படும் பென்ஷன் தொகையைக் குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் அறிவுறுத்தியது. ஆனால் கிரீஸ், நாட்டு அரசு மக்கள் நலன் கருதி இத்தகைய திட்டத்தை ஏற்கவில்லை.
நிதியுதவி
கிரீஸ் நாட்டின் அரசு அறிவித்துள்ள இப்புதிய திட்டத்தின் மூலம் போதுமான நிதி திரட்ட முடியும் என நம்பிக்கை கிடைத்தால் ஐரோப்பிய சென்ரல் வங்கி கண்டிப்பாக நிதியுதவி அளிக்கும்.
1.6 பில்லியன் டாலர்
சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்க வேண்டிய தவணை தொகை செலுத்த கிரீஸ் நாட்டிற்கு இம்மாத இறுதிக்குள்,சுமார் 1.6 பில்லியன் யூரோ தேவைப்படுகிறது.
ஐரோப்பிய சென்ரல் வங்கியிடம் இருந்து நிதியுதவி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.