வாஷிங்டன்: நூக் ஈ-புக் ரீடர் (மின்னணு புத்தக கருவி) தொழிலை மீண்டும் பார்ன்ஸ் அண்ட் நோபில் நிறுவனத்திடம் விற்றதில் 238 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மைக்ரோஃசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

மாபெரும் தொழிட்நுட்ப நிறுவனமான மைக்ரோஃசாப்ட், ஏப்ரல் 2012-ல் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்துடன், இந்த டிஜிட்டல் ஈ-புக் ரீடரின் 17.6% பங்குகளை விலைக்கு வாங்கியது. ஆனால் இதனை மீண்டும் பார்ன்ஸ் அண்ட் நோபில் நிறுவனத்திடம் வெறும் 62 மில்லியன் டாலர் ரொக்கத்திற்கு விற்றுள்ளது. 62.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள 2.7 மில்லியன் பார்ன்ஸ் அண்ட் நோபில் பங்குகளை மைக்ரோஃசாப்ட் கொண்டுள்ளது என CNN தெரிவித்துள்ளது.
போராடும் தன்னுடைய ஈ-ரீடருக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறியதால், இந்நிறுவனம் தன்னுடைய நூக் வணிகத்தை மூடுவதாக ஜூன் மாதம் அறிவித்திருந்தது. இந்த பிரிவில் அளவுக்கு அதிகமான பணி நீக்கம் செய்யப்பட்டது. மேலும் தான் தயாரித்திருந்த டாப்லெட்களை சாம்சங் நிறுவனத்திற்கு கை மாற்றி விட்டது.


Click it and Unblock the Notifications