பாகிஸ்தான்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று வரை பொருளாதாரம் நிலை பெற்றதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தலையை பிய்த்துக் கொள்கிறார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வழி முறைகளைச் செயல்படுத்த எத்தனித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் பெரிய மாற்றங்கள் நடந்ததாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் பொருளாதார பிரச்னையில் ஒரு பெரிய சோதனையாக ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 140 பாகிஸ்தானிய ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதுவும் மொஹரம் பண்டிகை அன்றே இந்த கொடுமை பாகிஸ்தானில் நடந்தேறி இருக்கிறது.
மதிப்பு
இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது 2.18 பாகிஸ்தானிய ரூபாய்க்குச் சமம். ஆக பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய் என்றால் இந்தியாவில் சுமார் 65 ரூபாய். இதில் வருத்தப்பட வேண்டிய ஒரு கூடுதல் விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையே 113 ரூபாய் தான். ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ருபாய் தானாம். ஆனால் பச்சைக் குழந்தைகள் எல்லாம் குடிக்கும் ஒரு லிட்டர் பாலின் விலை மட்டும் 140 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகி இருக்கிறது.
கராச்சி
பாகிஸ்தானின் கராச்சி பகுதி முழுக்க ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 120 முதல் 140 ரூபாய் வரை தேவையைப் பொறுத்து விற்பனை ஆனதாம். அதற்கு மொஹரம் பண்டிகை அன்று ஏற்பட்ட கூடுதல் தேவை எனவும் கராச்சி பகுதியில் பால் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். பொதுவாக மொஹரம் பண்டிகை அன்று நடக்கும் புனித ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு பழச்சாறு, பால், குளிர்ந்த நீர் போன்றவைகளைக் கொடுப்பது வழக்கமாம். அதனால் தான் பாலின் தேவையும் அதிகரித்து இருக்கிறதாம்.
வாடிக்கையாளர்
நாங்கள் ஒவ்வொரு வருடத்தின் மொஹரம் பண்டிகை காலத்திலும் புனித ஊர்வலம் வரும் மக்களுக்கு பால் கொடுப்பது வழக்கம். இந்த முறை பாலின் விலை அதிகரித்தாலும் பரவாயில்லை என கூடுதலாக செலவு செய்து பால் கொடுத்தோம். என் வாழ்நாளில் ஒரு லிட்டர் பாலின் விலை இந்த அளவுக்கு அதிகரித்து நான் பார்த்ததே இல்லை எனச் சொல்லி வருத்தப்படுகிறார் அந்த பாகிஸ்தானியர்.
94 ரூபாய் தான்
கராச்சியில் பால் விலையை காட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய அதிகாரி இஃப்திகர் சல்வானி இந்த பால் விலை ஏற்றத்தைக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என புகார்கள் எழுந்து இருக்கின்றன. கராச்சி நகரத்தில், அதிகாரபூர்வமாக ஒரு லிட்டர் பாலின் விலை 94 ரூபாய்க்கு தான் விற்க வேண்டுமாம். ஆனால் 140 ரூபாய்க்கு மேல் எல்லாம் விற்கப்பட்டு இருக்கிறது என்றால் அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனத் தெரியவில்லை..!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications