ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலையானது உலக அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 6வது நாளாக போர் பதற்றம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக உக்ரைனின் வேகத்தினை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள் என அங்கும் இங்கும் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர். சில தரப்பில் நாங்கள் போரினால் சாகிறோமோ இல்லையோ? உணவு, நீர் இன்றி, சரியான இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றோம். இதனால் இறந்து விடுவோமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது என கூறியது காண்போரை கண்ணீர் விட வைத்தது.
தற்காலிக தடை
அமெரிக்காவின் பிரபல எக்ஸ்சேஞ்ச் ஆன நாஸ்டாக் (Nasdaq), நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NYSE)ல் பட்டியலிடப்பட்ட, ரஷ்ய நிறுவனங்கள் தற்காலிகமாக பங்கு சந்தையில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வலைதளங்கள் மூலம் அறிய முடிகிறது.
இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதற்கிடையில் தான் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் தெரிகின்றது.
நாஸ்டாக்கில் இருந்து தடை
நெக்ஸ்டெர்ஸ் இன்க் (Nexters Inc), ஹெட்ஹண்டர் குரூப் பிஎல்சி (HeadHunter Group PLC), Ozon holdings PLC, Qiwi PLC மற்றும் Yandex உள்ளிட்ட பல பங்குகள் நாஸ்டாக் சந்தையில் பங்கு சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும் விரைவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யப்படுவததற்கான வாய்ப்பினையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
நியூயார்க் சந்தையில் தடை
இதே நியூயார்க் பங்கு சந்தையில் cian PLC, mechel PAO மற்றும் மொபைல் டெலிசிஸ்டம்ஸ் PAO உள்ளிட்ட சில நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்ந்து ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுதும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். மேலும் உக்ரைனின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சந்தை மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், தொழில்துறைக்கு நம்பிக்கைய கொடுக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என இக்குழு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கு பாதிப்பு
தொடர்ந்து பல பக்கங்களில் இருந்தும் ரஷ்யாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ரஷ்ய நிறுவனங்களுக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக பல நாடுகளும் வணிக நடவடிக்கைகளை நிறுத்தி வரும் நிலையில், தற்போது பங்கு சந்தையிலும் தடை செய்யப்பட்டு வருகின்றன. இது தற்காலிகமாக தடை செய்யப்பட்டு வரும் நிலையில், மேற்கொண்டு ரஷ்யாவின் நடவடிக்கையை பொறுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications