ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலையானது உலக அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 6வது நாளாக போர் பதற்றம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக உக்ரைனின் வேகத்தினை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள் என அங்கும் இங்கும் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர். சில தரப்பில் நாங்கள் போரினால் சாகிறோமோ இல்லையோ? உணவு, நீர் இன்றி, சரியான இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றோம். இதனால் இறந்து விடுவோமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது என கூறியது காண்போரை கண்ணீர் விட வைத்தது.
தற்காலிக தடை
அமெரிக்காவின் பிரபல எக்ஸ்சேஞ்ச் ஆன நாஸ்டாக் (Nasdaq), நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NYSE)ல் பட்டியலிடப்பட்ட, ரஷ்ய நிறுவனங்கள் தற்காலிகமாக பங்கு சந்தையில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வலைதளங்கள் மூலம் அறிய முடிகிறது.
இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதற்கிடையில் தான் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் தெரிகின்றது.
நாஸ்டாக்கில் இருந்து தடை
நெக்ஸ்டெர்ஸ் இன்க் (Nexters Inc), ஹெட்ஹண்டர் குரூப் பிஎல்சி (HeadHunter Group PLC), Ozon holdings PLC, Qiwi PLC மற்றும் Yandex உள்ளிட்ட பல பங்குகள் நாஸ்டாக் சந்தையில் பங்கு சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும் விரைவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யப்படுவததற்கான வாய்ப்பினையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
நியூயார்க் சந்தையில் தடை
இதே நியூயார்க் பங்கு சந்தையில் cian PLC, mechel PAO மற்றும் மொபைல் டெலிசிஸ்டம்ஸ் PAO உள்ளிட்ட சில நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்ந்து ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுதும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். மேலும் உக்ரைனின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சந்தை மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், தொழில்துறைக்கு நம்பிக்கைய கொடுக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என இக்குழு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கு பாதிப்பு
தொடர்ந்து பல பக்கங்களில் இருந்தும் ரஷ்யாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ரஷ்ய நிறுவனங்களுக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக பல நாடுகளும் வணிக நடவடிக்கைகளை நிறுத்தி வரும் நிலையில், தற்போது பங்கு சந்தையிலும் தடை செய்யப்பட்டு வருகின்றன. இது தற்காலிகமாக தடை செய்யப்பட்டு வரும் நிலையில், மேற்கொண்டு ரஷ்யாவின் நடவடிக்கையை பொறுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications