இலங்கையை அடுத்து அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருப்பது பாகிஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும், எப்போது திவாலாகும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அரசு தன்நாட்டு மக்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து அன்னிய செலாவணியைக் காப்பாற்றி வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தான் நாட்டின் உயர்த்தப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பாகிஸ்தான் இந்த மாதம் 4 பில்லியன் டாலர்களை நட்பு நாடுகளிடமிருந்து பெற வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற 6 பில்லியன் டாலர் கடன் வாங்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில்.
IMF அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) உயர்த்திக் காட்டப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறையைக் குறிப்பிட்டு IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளதாக நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் சனிக்கிழமை கூறினார். ஜூலை மாத இறுதிக்குள் இந்த 4 பில்லியன் டாலர் இடைவெளியை நிரப்ப போதுமான கடன் கிடைக்கும் எனவும் IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளது மிஃப்தா இஸ்மாயில் உறுதி அளித்துள்ளார்.
நட்பு நாடுகள்
ஒரு நட்பு நாட்டிலிருந்து எண்ணெய் கட்டணத்திற்காக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஒரு வெளிநாட்டு நாடு 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரையிலான பங்குகளில் G2G (அரசாங்கம்-அரசாங்கம்) அடிப்படையில் முதலீடு செய்யும் என்று, மேலும் மற்றொரு நட்பு நாடு எரிவாயு கட்டணத்திற்காக எரிவாயுவைக் கொடுக்கும் என்றும், மேலும் மற்றொரு நட்பு நாடு சில டெபாசிட்களைச் செய்யும் என்று மிஃப்தா இஸ்மாயில் நாடுகளைப் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
நாணய கையிருப்பு
வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருதல் மற்றும் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகியவை நாட்டின் பேமெண்ட் பிரச்சனையை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளனர். IMF ஒப்பந்தம் இல்லாமல், வெளிநாட்டு நிதிக்கான பிற வழிகளைத் திறக்க வேண்டும் என்று இஸ்மாயில் முக்கியக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
6 பில்லியன் டாலர் கடன்
6 பில்லியன் டாலர் கடன் திட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 3.5 பில்லியன் டாலர்கள் மற்றும் உலக வங்கியிடமிருந்து 2.5 பில்லியன் டாலர்கள் உட்படப் பலதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து பாகிஸ்தான் இந்த நிதியாண்டில் நிதி ஆதரவுகளைப் பெறும் என்று இஸ்மாயில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 500 மில்லியன் டாலர்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியும் நிதியை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இஸ்மாயில் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications