இலங்கையை அடுத்து அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருப்பது பாகிஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும், எப்போது திவாலாகும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அரசு தன்நாட்டு மக்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து அன்னிய செலாவணியைக் காப்பாற்றி வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தான் நாட்டின் உயர்த்தப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பாகிஸ்தான் இந்த மாதம் 4 பில்லியன் டாலர்களை நட்பு நாடுகளிடமிருந்து பெற வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற 6 பில்லியன் டாலர் கடன் வாங்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில்.
IMF அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) உயர்த்திக் காட்டப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறையைக் குறிப்பிட்டு IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளதாக நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் சனிக்கிழமை கூறினார். ஜூலை மாத இறுதிக்குள் இந்த 4 பில்லியன் டாலர் இடைவெளியை நிரப்ப போதுமான கடன் கிடைக்கும் எனவும் IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளது மிஃப்தா இஸ்மாயில் உறுதி அளித்துள்ளார்.
நட்பு நாடுகள்
ஒரு நட்பு நாட்டிலிருந்து எண்ணெய் கட்டணத்திற்காக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஒரு வெளிநாட்டு நாடு 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரையிலான பங்குகளில் G2G (அரசாங்கம்-அரசாங்கம்) அடிப்படையில் முதலீடு செய்யும் என்று, மேலும் மற்றொரு நட்பு நாடு எரிவாயு கட்டணத்திற்காக எரிவாயுவைக் கொடுக்கும் என்றும், மேலும் மற்றொரு நட்பு நாடு சில டெபாசிட்களைச் செய்யும் என்று மிஃப்தா இஸ்மாயில் நாடுகளைப் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
நாணய கையிருப்பு
வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருதல் மற்றும் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகியவை நாட்டின் பேமெண்ட் பிரச்சனையை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளனர். IMF ஒப்பந்தம் இல்லாமல், வெளிநாட்டு நிதிக்கான பிற வழிகளைத் திறக்க வேண்டும் என்று இஸ்மாயில் முக்கியக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
6 பில்லியன் டாலர் கடன்
6 பில்லியன் டாலர் கடன் திட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 3.5 பில்லியன் டாலர்கள் மற்றும் உலக வங்கியிடமிருந்து 2.5 பில்லியன் டாலர்கள் உட்படப் பலதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து பாகிஸ்தான் இந்த நிதியாண்டில் நிதி ஆதரவுகளைப் பெறும் என்று இஸ்மாயில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 500 மில்லியன் டாலர்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியும் நிதியை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இஸ்மாயில் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications