மாஸ்கோ: அமெரிக்காவின் உணவு பொருள், இறைச்சி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காய்கறி இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை வதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் எதிராக, உக்ரெய்னில் இருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவிகளை தடுக்கும் பொருட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவு இறக்குமதி பொருட்களை நம்பி இருக்கும் பொது மக்களை கடுமையாக பாதிக்கும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறி, அமெரிக்காவில் இருந்து இறைச்சி இறக்குமதியில், மாஸ்கோ முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த தடையினால் இந்த பொருட்களின் விலை உயர்வும், பற்றாக்குறையும் ஏற்படும்.
உண்மையில் இந்த தடை, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையின் காரணமாகவே இத்தடையை ரஷ்ய அரசு (புட்டின்) அறிவித்துள்ளாது.
(READ: 6 reasons to buy Gold ETFs in place of physical gold)
விளாடிமிர் புட்டின்
இதுகுறித்து ரஷ்யாவின் உணவு கட்டுப்பாடு கண்காணிப்பாளரான அலேக்சி அலேக்சின்கோ கூறுகையில் "ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் உத்திரவின் படி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்" எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எண்ணிக்கை மிகவும் கணிசமானது என அலேக்சி தெரிவித்தார். ஆனாலும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
பொருளாதார தடைகள்
உலக நாடுகளின், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் கடந்த 3 வாரமாக ஒரு போர் போல காட்சி அளிக்கிறது, மேலும் இதன் உக்கிரம் நாளிடைவில் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. ரஷ்ய கிளர்ச்சிக்காரர்கள் மலேசிய விமானத்தை சுட்டு விழ்த்தியதை தொடர்ந்து இந்த பிரச்சனை மேலும் சூடு பிடித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் பதற்றம்
NATOவின் தகவல் படி உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா 20,000 ரானுவ அதிகாரிகளை குவித்துள்ளது, இதனால் இப்படை எந்த நேரத்திலும் தரை மார்கமாக எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவலாம் எனவும் NATO எச்சரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications