மாஸ்கோ: அமெரிக்காவின் உணவு பொருள், இறைச்சி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காய்கறி இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை வதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் எதிராக, உக்ரெய்னில் இருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவிகளை தடுக்கும் பொருட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவு இறக்குமதி பொருட்களை நம்பி இருக்கும் பொது மக்களை கடுமையாக பாதிக்கும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறி, அமெரிக்காவில் இருந்து இறைச்சி இறக்குமதியில், மாஸ்கோ முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த தடையினால் இந்த பொருட்களின் விலை உயர்வும், பற்றாக்குறையும் ஏற்படும்.
உண்மையில் இந்த தடை, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையின் காரணமாகவே இத்தடையை ரஷ்ய அரசு (புட்டின்) அறிவித்துள்ளாது.
(READ: 6 reasons to buy Gold ETFs in place of physical gold)
விளாடிமிர் புட்டின்
இதுகுறித்து ரஷ்யாவின் உணவு கட்டுப்பாடு கண்காணிப்பாளரான அலேக்சி அலேக்சின்கோ கூறுகையில் "ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் உத்திரவின் படி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்" எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எண்ணிக்கை மிகவும் கணிசமானது என அலேக்சி தெரிவித்தார். ஆனாலும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
பொருளாதார தடைகள்
உலக நாடுகளின், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் கடந்த 3 வாரமாக ஒரு போர் போல காட்சி அளிக்கிறது, மேலும் இதன் உக்கிரம் நாளிடைவில் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. ரஷ்ய கிளர்ச்சிக்காரர்கள் மலேசிய விமானத்தை சுட்டு விழ்த்தியதை தொடர்ந்து இந்த பிரச்சனை மேலும் சூடு பிடித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் பதற்றம்
NATOவின் தகவல் படி உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா 20,000 ரானுவ அதிகாரிகளை குவித்துள்ளது, இதனால் இப்படை எந்த நேரத்திலும் தரை மார்கமாக எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவலாம் எனவும் NATO எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications