ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், உலக நாடுகள் பலவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மோதல் பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறியுள்ளார்.
எனினும் உண்மையில் அதன் உலகளாவிய செல்வாக்கை மீட்டெடுக்கும் ஒரு புதிய இறையாண்மை போக்கை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று கூறப்படும் இந்த தாக்குதலில், ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாகவும் எதையும் இழக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார்.
நம்மை வலுப்படுத்தும்
மேலும் நாங்கள் எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்கவும் மாட்டோம். தேவையற்ற, தீங்கு விளைவிக்கும் மற்றும் முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்தும் நிராகரிக்கப்படும் என கூறியுள்ளார்.
நாம் பெற்றதை பொறுத்தவரையில், இது நம் இறையாண்மையை வலுப்படுத்தியுள்ளது என என்னால் கூற முடியும். தற்போது நடப்பதன் விளைவை யாராலும் தவிர்க்க முடியாது. அது இறுதியில் நம்மை உள்ளிருந்து பலப்படுத்தும் என கூறியுள்ளார்.
உக்ரைன் திட்டம்
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன். இந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. எனினும் நேட்டோ நேச நாடாக உள்ளது. இது எதிர்காலத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் எதிர்பார்ப்பு
ஆனால் அப்படியொரு சம்பவம் நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கத்திய நாடுகள் தர வேண்டும் என ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அத்தகைய உத்தரவாதத்தினை கொடுக்கவில்லை. மாறாக உக்ரைனுக்கு தங்களது ஆதரவை வழங்கி, நட்பு நாடாக பார்த்து வருகின்றன. இது ரஷ்யாவின் கோபத்தினை மேற்கொண்டு அதிகமாக தூண்டியது.
புடினின் வாதம் இது தான்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு, நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புடின் கூறிவந்தார். மொத்தத்தில் இந்த வாய்வழி பிரச்சனையானது, தற்போது ராணுவ நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி 24,2022ல் மாறி பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இன்று வரையிலுமே இவ்விரு நாடுகளும் பின் வாங்குவதாக இல்லை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications