ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், உலக நாடுகள் பலவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மோதல் பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறியுள்ளார்.
எனினும் உண்மையில் அதன் உலகளாவிய செல்வாக்கை மீட்டெடுக்கும் ஒரு புதிய இறையாண்மை போக்கை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று கூறப்படும் இந்த தாக்குதலில், ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாகவும் எதையும் இழக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார்.
நம்மை வலுப்படுத்தும்
மேலும் நாங்கள் எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்கவும் மாட்டோம். தேவையற்ற, தீங்கு விளைவிக்கும் மற்றும் முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்தும் நிராகரிக்கப்படும் என கூறியுள்ளார்.
நாம் பெற்றதை பொறுத்தவரையில், இது நம் இறையாண்மையை வலுப்படுத்தியுள்ளது என என்னால் கூற முடியும். தற்போது நடப்பதன் விளைவை யாராலும் தவிர்க்க முடியாது. அது இறுதியில் நம்மை உள்ளிருந்து பலப்படுத்தும் என கூறியுள்ளார்.
உக்ரைன் திட்டம்
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன். இந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. எனினும் நேட்டோ நேச நாடாக உள்ளது. இது எதிர்காலத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் எதிர்பார்ப்பு
ஆனால் அப்படியொரு சம்பவம் நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கத்திய நாடுகள் தர வேண்டும் என ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அத்தகைய உத்தரவாதத்தினை கொடுக்கவில்லை. மாறாக உக்ரைனுக்கு தங்களது ஆதரவை வழங்கி, நட்பு நாடாக பார்த்து வருகின்றன. இது ரஷ்யாவின் கோபத்தினை மேற்கொண்டு அதிகமாக தூண்டியது.
புடினின் வாதம் இது தான்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு, நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புடின் கூறிவந்தார். மொத்தத்தில் இந்த வாய்வழி பிரச்சனையானது, தற்போது ராணுவ நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி 24,2022ல் மாறி பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இன்று வரையிலுமே இவ்விரு நாடுகளும் பின் வாங்குவதாக இல்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications