டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான சுசூகி மோட்டோ கார்ப் நிறுவனம் 6வருடத்தில் முதல் முறையாகத் தனது லாப இலக்கை தவறவிட்டுள்ளது.
உள்நாட்டில் மற்றும் தெற்கு ஆசியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் தேவை குறைந்ததாலும், நாணய சந்தையில் ஏற்பட்ட மந்த நிலையாலும் இந்நிறுவனத்தின் லாப அளவை அதிகளவில் பாதித்ததுள்ளது.
4.4 சதவீதம் சரிவு
இந்தியாவின் 4வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான சுசூகி நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் இயக்கலாபம் அளவு 4.4 சதவீதம் குறைந்து 179.42 பில்லியன் யென் ஆக உள்ளது அதாவது 1.50 பில்லியன் டாலர்.
நாணய மதிப்பு
சர்வதேச சந்தையில் யென் நாணய மதிப்பு அதிகளவில் குறைந்ததால், இந்நிறுவனம் 22.2 பில்லியன் யென் லாபத்தைஇழந்துள்ளது.
கணிப்புகள்
நிறுவன கணிப்புகளின் படி 2014ஆம் நிதியாண்டின் மொத்த லாப அளவு 188 பில்லியன் யென்-ஆக இருக்கும் எனச் சுசூகிகணித்திருந்தது.
புதிய இலக்கு
நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 5.9 உயர்த்த சுசூகி நிறுவனம் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
விற்பனை
மேலும் மொத்த விற்பனை அளவிலும் 3.9 சதவீதம் அதிகரிக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது. 2015ஆம் ஆண்டில் இந்தியாமற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கப் புதிய திட்டங்களை வடிவமைத்துள்ளதாகத்தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுசூகி
இந்திய சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனையை 10 சதவீதம் வரை உயர்த்தவும், இந்தியாவில்கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்கத் திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.