உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு எதிரான சூழ்நிலையில் உருவாக்கி வரும் நிலையிலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பிட்காயின் மதிப்பு கிட்டதட்ட 53,000 டாலர் அளவீட்டைத் தொடும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 52,954 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்நிலையில் பிட்காயின் முதலீட்டாளர்களும் சமீபத்தில் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பணத்தை விடப் பிட்காயின் மேல் என்று தனது டிவிட்டர் கணக்கில் டிவீட் செய்துள்ளார்.
பினான்ஸ் சிஇஓ
உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான பினான்ஸ்-ன் சிஇஓ Changpeng Zhao அளித்த பேட்டியில், எலான் மஸ்க் டோஸ்காயினுக்கு ஆதரவு அளித்துக்கொண்டு இருப்பது வியப்பு அளித்தாலும், அவருடைய டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் தான் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது, டோஜ்காயினில் முதலீடு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டிவீட்
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது டிவிட்டரில், என்னுடைய கருத்து அனைத்தையும் டெஸ்லா பிரதிபலிக்காது. கையில் முட்டாள்தனமாகப் பணத்தை வைத்திருப்பதை விடவும் பிட்காயின் வைத்திருப்பது மேல். இதுமட்டும் அல்லாமல் பிட்காயின் முதலீடு என்பது S&P நிறுவனத்திற்குத் துணிகரமான செயலாக நான் பார்க்கிறேன்.
நான் ஒரு இன்ஜினியர்
இதேபோல் நான் ஒரு முதலீட்டாளர் இல்லை, நான் ஒரு இன்ஜினியர். டெஸ்லா நிறுவனப் பங்குகளைத் தவிர வேறு நிறுவனங்களில் நான் முதலீடு செய்யவோ, வைத்துக்கொள்ளவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முட்டாள்கள்
அனைத்திற்கும் மேலாகப் பணத்தின் மதிப்புத் தற்போது தொடர்ந்து குறைந்து வரும் போது முட்டாள்கள் தான் மாற்று வழிகளைத் தேடாமல் இருப்பார்கள். பிட்காயின் பணத்திற்கு இணையான ஒன்று எனவும் அடுத்தடுத்த டிவீட்டில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா முதலீடு
35,000 டாலரில் வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் மதிப்பு இன்று கிட்டதட்ட 53,000 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதிற்கு மிகவும் முக்கியக் காரணம் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு தான் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. மேலும் பேபால் நிறுவனத்தைப் போல் டெஸ்லாவும் பிட்காயினைப் பேமெண்ட் முறையாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications