இணையப் பொழுதுபோக்குத் தளத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ள டிக்டாக், கடந்த சில வருடங்களாகவே பல்வேறு சிக்கல்களையும், அரசின் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்த டிக்டாக் லாக்டவுன் நேரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையத் துவங்கியது.
ஆனால் தகவல் பாதுகாப்பு என்ற பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டது.
டிக்டாக் செயலி
டிக்டாக் செயலி மீது தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருந்த காரணத்தாலும், இந்நிறுவனம் அமெரிக்க மக்களின் தரவுகளைத் திரட்டுவதிலும், சேமிப்பதிலும் அமெரிக்க அரசுக்கு பல்வேறு சந்தேகமும், கேள்விகளும் இருந்தது.
3 ஆப்ஷன்
இதனால் டிக்டாக் செயலியை தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிட்டுச் சீனா தொடர்பை துண்டித்து விட்டு இயங்குவது அல்லது அரசு கூறும் விதிமுறைகளை எவ்விதமான சமரசமின்றி நடைமுறைப்படுத்துவது என்ற 3 ஆப்ஷனை முன்வைத்தது. இதற்கான முடிவைத் தான் தற்போது டிக்டாக் நிர்வாகம் எடுத்துள்ளது.
அமெரிக்க அரசு மற்றும் டிக்டாக்
அமெரிக்க அரசு மற்றும் டிக்டாக் இணைந்து ஒரு திட்டத்தைத் தீட்ட முடிவு செய்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் டிக்டாக் நிறுவனம் தனது டேட்டா செக்யூரிட்டி மற்றும் நிர்வாகத்தைச் சீனா தாய் நிறுவனம் பையிட்டான்ஸ்-ன் எவ்விதமான உதவிகளும் இல்லாமல் இயங்க உள்ளது.
நெருக்கடி
இதன் மூலம் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க உள்ளது. இதற்காக டிக்டாக் மற்றும் பைடன் அரசும் ஏற்கனவே ஆரம்பக்கட்ட ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், விரிவான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை இரு தரப்பும் ஆலோசனை செய்து வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
தற்போது இந்த ஒப்பந்தம் குறித்தும், முடிவுகள் குறித்தும் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிக்டாக், பையிட்டான்ஸ், அமெரிக்க அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. மேலும் 2 வருடத்திற்கு முன்பு அமெரிக்க அரசு டிக்டாக்-ஐ சீன நிறுவனத்திலிருந்து தனியாகப் பிரித்து இயக்க உத்தரவிட்டது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications