உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சியோமி பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு டெஸ்லா-வுக்குப் போட்டியாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காகச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்த சியோமிக்கு பெரும் தடை ஏற்பட்டு உள்ளது, சீன நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் தான் பிரச்சனை என்றால் தற்போது உள்நாட்டிலும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
சியோமி, ஹூவாய்
சியோமி, ஹூவாய் போன்ற பல சீன டெக் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே டெஸ்லா-வின் வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு எலக்ட்ரிக் வாகன பிரிவில் இறங்க வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகின்றனர். இதில் ஹூவாய் தனது டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்திற்கு உலக நாடுகள் முழுவதிலும் பிரச்சனை ஏற்பட்டதால் இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கியது.
லீ ஜூன்
சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ ஜூன் கடந்த ஆண்டு வெளியிட்ட திட்டத்தின் படி 2024ஆம் ஆண்டுக்குள் சியோமி நிறுவனம் பெய்ஜிங்-ல் கட்ட உள்ள புதிய தொழிற்சாலையில் வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் என உற்பத்தி அளவை எட்டும் என்றும், இதைப் படிப்படியாக விரிவாக்கம் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே சியோமி திட்டம்.
10 பில்லியன் டாலர்
ஆனால் தற்போது சியோமி-யின் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டத்திற்குச் சீன அரசு நிர்வாகம் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்துள்ளது. இது சியோமி தலைவர் லீ ஜூன் கனவு திட்டத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம்
சியோமி நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கச் சீன அரசிடம் இருந்து உரிமம் பெற பல மாதங்களாக அந்நாட்டு தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
BYD மற்றும் NIO
சீனாவில் ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாக BYD மற்றும் NIO என்னும் இரு எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது, ஏற்கனவே இவ்விரு நிறுவனங்களும் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விற்பனைக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் சியோமி வருகை சூழ்நிலையைக் கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சியோமி உரிமம் பெற முடியாமல் நிற்கிறது.
1000 ஊழியர்கள்
சியோமி தனது எலக்ட்ரிக் வாகன பிரிவில் மட்டும் சுமார் 1000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது, இந்த 1000 ஊழியர்களில் பெரும் பகுதியினர் கார் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக விரிவாக்கப் பிரிவில் இருப்பவர்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications