ஏதென்ஸ்: கடன் நெருக்கடியின் காரணமாக நிலைகுலைந்துள்ள கிரீஸ் நாட்டை ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரித்து அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்நாட்டு மக்களின் ஒப்புதலுக்காக நாளை வாக்கெடுப்பு நடக்கிறது.
கிரீஸ் நாட்டை ஐரோப்பிர கூட்டணியில் இருந்து பிரிக்க விரும்பாத மக்கள் இந்நாட்டிற்கு ஆதரவாகத் தெருக்களில் பிரச்சாரம் செய்யத் துவங்கியுள்ளனர்.
ஆதரவு பிரச்சாரம்
இதுகுறித்துக் கிரீஸ் நாட்டின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் கிரீஸை ஆதரிப்புது தான் சரி. மக்களும் அதைத் தான் வரும்புகின்றனர் என அவர் கூறினார்.
ஐரோப்பிய ஆதரவாளர்கள்
நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், கிரீஸ் நாட்டிற்கு எதிராகவும் சிலர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
10 வருடம் பின்னோக்கி
கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலைக் குறித்து ஐரோப்பிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "மக்கள் இவ்வாக்கெடுப்பில் 'சம்மதம்'(YES) தெரிவிக்க வேண்டும். கடந்த 5 மாதத்தில் கிரீஸ் எங்களைப் பொருளாதார ரீதியில் 10 வருட பின்னே கொண்டு சென்றுள்ளது." எனத் தெரிவித்தார்.
வாக்கெடுப்பு
இத்தகைய சூழ்நிலையிலும் கிரீஸ் மக்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவுகிறது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை அளிக்கிறது. நாளை நடக்க உள்ள வாக்கெடுப்பில் இந்நாட்டின் முழுமையான நிலை தெரிய வரும்.