பங்கு சந்தை வர்த்தகம் என்பது ஒரு சூதாட்டம் என பலர் சொல்லி கேட்டிருப்போம். உண்மையில் இது ஒரு ஆழ்கடல். ஆக இந்த ஆழ்கடலை பற்றி உண்மையாக, இதனை பற்றி அறிந்தவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும்.
இல்லையெனில் நஷ்டம் எனும் தண்ணீரில் மூழ்க வேண்டியிருக்கும். ஆக எடுத்தவுடன் கேட்பார் பேச்சை கேட்டுக் கொண்டு பங்கு சந்தையில் முதலீடு என்பது ஆழம் தெரியாமல் காலை விடுவதாகவும்.
ஆக முதலில் பங்கு சந்தையை பற்றி முழுமையாக அறிந்த பின்னர், அதில் முதலீடு செய்யலாம். இல்லையெனில் சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்து லாபம் பெறலாம்.
சிக்கலான முதலீடு
அதிலும் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில், சந்தையில் பலமான ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகின்றன. உண்மையில் சொல்லப்போனால் பல மோசனமான சூழ்நிலைக்களுக்கு மத்தியில் பங்கு சந்தை முதலீடு என்பது மிக சிக்கலான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்படி இருக்கையில் நிபுணர்கள் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர்.
டாடா பங்குகள் பரிந்துரை
குறிப்பாக டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா பவர், டாடா கெமிகல்ஸ், டாடா கன்சியூமர் என மூன்றும் பங்குகளும்,, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு நல்லதொரு லாபத்தினை கொடுக்கலாம் என்கிறார்கள் IIFL securities நிபுணர்கள். மேலும் இந்த டாடா கன்சியூமர் பங்குகள் தங்க சுரங்கம் என்றும் மிகைப்படுத்தி கூறியுள்ளனர்.
நல்ல லாபம் தரலாம்
டாடா குழுமம் நாட்டின் மிகப்பழையானையான குழுவாகும். அவை மிகவும் தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. ஆக இது சம்பந்தமான டாடா பண்டுகளிலும் முதலீடு செய்யலாம். இது முதலீட்டாளர்களுக்கு லாபத்தினை தரலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்
ஆக நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த பங்குகள் ஒரு சிறந்த ஆப்சனாக இருக்கலாம். எனவே சரியான ஆலோசனைக்கு பிறகு முதலீடு செய்யப்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். எனினும் இறுதி முடிவு என்பது உங்களுடையதாகவே இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் முதலீட்டு தகுதி, முதலீடு செய்யும் திறன் என அனைத்துக்கும் ஏற்றவாறு முதலீடு செய்ய வேண்டும்.