டெல்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகள் தங்களுக்கான ஊதியத்தை வழங்கக் கோரி மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 75 விழுக்காடு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது... இன்னும் சிலருக்குத்தான் ஊதிய பாக்கி இருக்கிறது.. இருப்பினும் ஊழியர்கள் பணிக்கு வராததால் சில விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கிங்பிஷர் விமானிகள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இத்தகைய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமத்தை ரத்து செய்ய நேரிடும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
Share This Article
English summary
Kingfisher pilots on strike, several flights cancelled | விமானிகள் வேலை நிறுத்தம் - கிங்பிஷர் விமான சேவைகள் ரத்து
Fund-starved Kingfisher has cancelled some of its flights on Saturday as unpaid employees, mainly pilots, struck work due to non-payment of wages. The airline now operates a skeletal schedule and is now even unable to operate that without hiccups.
Story first published: Saturday, July 14, 2012, 12:12 [IST]
Other articles published on
Jul 14, 2012