
அரியானா மாநிலத்தின் குர்கான் மில்லியனியம் சிட்டியில் பெண்களைத்தான் குறிவைத்துதான் பீர் மார்க்கெட்டிங்கே அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது..
குர்கானில்தான் பெரும்பாலானா பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தலைமையகங்கள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் பெண்கள் பலரும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தங்களது கம்பெனிகளின் சார்பில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அங்கேபோகும் போது "பீர்" குடிக்கும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்கின்றனர். நாடு திரும்பிய பிறகும்கூட பீர் குடிப்பதை ஒரு சாதாரணமாக குடிநீர் குடிக்கும் வழக்கத்தைப் போலத்தான் பார்க்கின்றனர்.
குர்கானில் இருக்கும் லெம்ப் ஹோட்டல் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவுமே அந்த ஹோட்டலுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பீர் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல் ஆம்பீசியன் மாலில் இருக்கும் பீர் கபேயில் அண்மையில் ப்ரூட் பீர் அறிமுகப்படுத்தப்பட்டது. பெல்ஜியத்தின் ப்ரூட் பீர் இந்தியாவிலேயே இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஜாலியாக சிறப்பித்திருக்கின்றனர்.
பீர் விற்பனைக்கு பெண்களை பயன்படுத்தும் மர்க்கெட்டிங் குறித்து கருத்து தெரிவித்த பீர் கபே நிர்வாகிகள், பீர் என்பது மதுபானம் அல்ல... சாதாரண குளிர்பானம்.,..உடல்நலத்துக்கு கேடானது என்பதெல்லாம் உண்மையில்லை.. அப்படி வெட்கப்படுவோர்தான் பெண்கள். அவர்களே பீர் குடிக்க வரும்போது வர்த்தகம் அதிகரிக்கும் அல்லவா என்கின்றனர்.
குர்கான் மற்றும் டெல்லியில் பெரும்பாலான இளம்பெண்கள் பீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.
குர்கான் கேர்ல்ஸ் கேங் நிர்வாகி ஸ்வேதா இது பற்றி கூறுகையில், ஆண்கள்தான் பீர் குடிப்பார்கள் என்று பொதுவாக நினைக்கின்றனர். 25 முதல் 35 வயது வரையிலான பெண்கள் பீர் குடிப்பதில் ரொம்பவும் ஆர்வமாகவே இருக்கின்றனர்.அண்மையில் லெம்ப் ஹோட்டலில் நடந்த பீர் அறிமுக விழாவில் எங்களது குரூப்பைச் சேர்ந்த 40 பேர் வரை கலந்து கொண்டோம் என்றார்.
இப்ப பீர் குடிப்பதை பெண்கள் பேஷனாக்கிக் கொண்டதால் இனி சும்மா 2 பீர்தான் மச்சி என்றெல்லாம் ஆண்கள் தமது நண்பர்களிடம் கூறி மொக்கை வாங்கிக் கொள்ள வேண்டாம்!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications