ஈரோடு: ஈரோட்டியில் கோழிப்பண்ணையில் முதலீடு செய்தால் 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்து மோசடி செய்ததாக பெண் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார்கள், மோட்டர் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த திருவேங்கிடம்பாளையத்தை சேர்ந்தவர் முருகவேல். இவர் ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகே ஸ்ரீநித்யா என்ற பெயரில் அலுவலகம் அமைத்து வில்லரசம்பட்டி, காலிங்கராயன்பாளையம் போன்ற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் நடத்தி வந்தார்.
இவரது நாட்டுக்கோழி பண்ணையில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீதம் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், ஸ்ரீநித்யா நாட்டுக்கோழி பண்ணையில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கோழிக்குஞ்சுகள் வழங்காமலும் இருந்துள்ளார். இது குறித்து பவானி கேசரிமங்கலத்தை சேர்ந்த குமார் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
மேலும் ஸ்ரீநித்யா ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை மீது 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பண்ணை உரிமையாளர் முருகேவல், இவரது மனைவி லதா, மகன் குணா மற்றும் நிர்வாகிகள் ராசு, சுரேஷ், கணேசன், மணிவண்ணன், பாலாஜி, பிரபாகர், ரமேஷ் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 7 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications