ஈரோடு: ஈரோட்டியில் கோழிப்பண்ணையில் முதலீடு செய்தால் 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்து மோசடி செய்ததாக பெண் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார்கள், மோட்டர் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த திருவேங்கிடம்பாளையத்தை சேர்ந்தவர் முருகவேல். இவர் ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகே ஸ்ரீநித்யா என்ற பெயரில் அலுவலகம் அமைத்து வில்லரசம்பட்டி, காலிங்கராயன்பாளையம் போன்ற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் நடத்தி வந்தார்.
இவரது நாட்டுக்கோழி பண்ணையில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீதம் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், ஸ்ரீநித்யா நாட்டுக்கோழி பண்ணையில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கோழிக்குஞ்சுகள் வழங்காமலும் இருந்துள்ளார். இது குறித்து பவானி கேசரிமங்கலத்தை சேர்ந்த குமார் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
மேலும் ஸ்ரீநித்யா ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை மீது 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பண்ணை உரிமையாளர் முருகேவல், இவரது மனைவி லதா, மகன் குணா மற்றும் நிர்வாகிகள் ராசு, சுரேஷ், கணேசன், மணிவண்ணன், பாலாஜி, பிரபாகர், ரமேஷ் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 7 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications