
( Compare home loans rates online before you apply for one )
நாட்டின் மிக பெரிய வீட்டு கடன் நிறுவனமான எச்டிஎஃப்சியின் தலைவரான பரேக், "வீடு வாங்குபர்கள், டெவலப்பர்கள் வழங்கும் திட்டங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்", என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர், "வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள், டெவலப்பர்கள் வழங்கும் சலுகைகளான வாடிக்கையாளர்களின் வட்டியை டெவலப்பர்களே செலுத்துவது பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
" நிதித் துறை நிறுவனங்கள் புதுமையான மற்றும் மிகத் தீவிரமான வீட்டுக் கடன் வழங்கும் திட்டங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு டீசர் வீட்டுக் கடன் (இத்தகைய வீட்டுக் கடன்களில் வட்டி விகிதம் கனிசமாக உயரும்) வழங்கக் கூடாது. தனி நபர்களுக்கு வழங்கும் அதே வட்டி விகிதத்தில் டெவலப்பர்களுக்கு கடன் வழங்கக் கூடாது", எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் வீட்டு நிதிச் சந்தை கண்டுள்ள வளர்ச்சியை பாராட்டியுள்ள அவர், எச்டிஎஃப்சி பங்குதாரர்களுக்கு அனுப்பிய தனது வருடாந்திர கடிதத்தில், " அடிப்படையில் கட்டுமான நிதித்துறை என்பது உயர் ஆபத்துக்களுக்கு உட்படுகிறது. இந்தத் துறையில் இது போன்ற ஆபத்துகளை தவிர்க்க இயலாது. ஆகவே இது போன்ற அபாயங்களை வருமானமாக மாற்ற வேண்டும்.
கட்டுமான நிதி, எந்த புதுமையான வழிமுறைப்படுத்துதல்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில், டெவல்ப்பர்களுக்கு கிடைக்க கூடாது. மேலும், நிலங்களைப் பிரிக்கும் முன் டெவலப்பர்களுக்கு வழங்கப்படும் முன்கூட்டிய மற்றும் முழுமையான நிதி உதவி மிகவும் ஆபத்தானது", எனக் குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை உள்ள போதிலும், வீடுகளின் விலை அதிகமாகவே உள்ளது, என பரேக் தெரிவித்தார்.
வீட்டு விலைகள் கடந்த கால வரலாறுகளை உடைத்துள்ள இந்த நேரத்தில், அதிகமான வீடுகளை சந்தைக்கு கொண்டு வருவது மட்டுமே இந்தியாவில் வீட்டு விலைகளை குறைப்பதற்கு உண்டான ஒரே வழி என நான் கருதுகிறேன். இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் கூட வீட்டு விலைகள் உயர்ந்து விட்டன", என அவர் தெரிவித்தார்.
மலிவு விலை வீடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புதிய இன தொழில் முனைவோர், மற்றும் முதல் முறை டெவலப்பர்களை, பரேக் பாராட்டியுள்ளார்.
"இத்தகைய திட்டங்களின் போக்கு சந்தையை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இங்கு மட்டுமே உண்மையான தேவை இருக்கிறது. இந்த மலிவு வீட்டுத் திட்டங்கள் பெரும்பாலானவை உடனடியாக விற்று வருகின்றன. இதை கவனிக்கும் மிகப் பெரிய டெவலப்பர்கள் மலிவு விலை வீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவார்கள். அவர்களுடைய கவனம் பெரிய ஆடம்பர வீடுகளைத் தவிர்த்து மலிவு விலை வீடுகளின் பக்கம் திரும்பும், "என்று அவர் கூறினார்.
வங்கிகளின் வட்டி விகிதங்களைப் பற்றி பேசும் பொழுது, "சில வங்கிகள் ஆரம்ப காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கினாலும், பிற்காலத்தில் அதை படிப்படியாக அதிகரித்து விடுகின்றன. ஆனால் அத்தகைய போக்கு மிக ஆபத்தானது அது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்", என பரேக் தெரிவித்தார்.
கடன் தொகையை டெவலப்பர் தாமதப்படுத்தும் பட்சத்தில், அது பயனாளிகளின் கடன் அறிக்கையில் எதிரொலிக்கும். இத்தகைய பதிவுகளைப் பற்றி பயனாளிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
"இறுதியில், டெவலப்பர்கள் ஒன்றை உணர வேண்டும். நீண்ட கால நோக்கில் வீட்டு விலைகளில் ஏற்படும் திருத்தம், பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அது டெவலப்பர்களுக்கே சாதகமாக அமையும்" என்று அவர் கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications