பிடிஐ அறிக்கையில் "தற்போது உள்ள வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டோம்" எனவும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய ரூ.70,000 கோடி ரூபாய் எக்சஸ் லிக்விடிட்டியில் வங்கி உள்ளது எனவும், இதில் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் பாதுகாப்பதற்காக, ரிசர்வ் வங்கி லிக்விடிட்டி டைடனிங்கை (liquidity tightening) அறிமுகப்படுத்திய பின்னரே வந்தது எனவும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணப்புழக்கதின் அளவைக் குறைக்க, கடந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, எஸ் வங்கி (Yes Bank) மற்றும் கடன் வழங்கும் தனியார் வங்கிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய இரண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.