மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமான டாடா பவர் கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 1402.9 கோடி யூனிட்டுகளை உற்பத்தி செய்தது, அதை தவிடுபொடி ஆக்கும் வகையில் இப்போது 2273.8 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக தனது செய்திகுறிப்பில் டாட்டா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அதன் உற்பத்தித் திறன் 8,521 மெகாவாட் என்ற அளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஆறு மாதங்களில் தனது மின் உற்பத்தியை 62 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக டாட்டா பவர் நிறுவனம் கூறியது.

அதன் துணை நிறுவனங்களான கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (CGPL) மற்றும் மைதான் பவர் லிமிடெட் (MPL) ஆகியவை தொடர்ந்து தமது உற்பத்திப் பங்களிப்பை அளித்து வருகிறது 1157.4 கோடி யூனிட்டுகள் மற்றும் 293 கோடி யூனிட்டுகளை 2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தந்து முக்கியத்துவம் பெற்றன என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
CGPL முந்த்ராவில் 4,000 மெகாவாட் மிகப்பெரும் மின் திட்டத்தையும், MPL ஜார்கண்டில் 1,050 மெகாவாட் மின் திட்டத்தையும் நடத்துகின்றன.
பசுமை மின் உற்பத்தி கடந்த ஆறு மாதங்களில் 143.9 கோடி யுனிட்டுகளாக, அதாவது மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருந்தது. இந்த உற்பத்தி கூடமானது பசுமை வாயுக்கள் எனப்படும் (கிரீன் ஹவுஸ்) வாயுக்களை வெளியிடாத மூலங்களிலிருந்து 20 முதல் 25 சதவிகித உற்பத்தியை பெற குறிக்கோளை கொண்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications