இந்தியாவில் பல்வேறு துறைகளில் மிகபெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டாடா நிறுவனம், தொலைத்தொடர்பு வணிகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், டாடா குழுமத்தில் ஒரு அதிர்ப்தி நிலவுகிறது. தொலை தொடர்பு துறை வணிகத்திலிருந்து டாடா குழுமம் முற்றிலும் வெளியேறுகிறது என்ற முடிவினை சைரஸ் மிஸ்ட்ரி எடுத்துள்ளதாக நேரடியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் டாடா குழுமம், டாடா கம்யூனிகேஷன் மற்றும் டாடா டெலி ஆகிய நிறுவனங்களை விற்கும் பொருட்டு வோடஃபோன் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது என்ற தகவலையும் தெரிவிக்கின்றன. மேலும் ஒப்பந்தததிற்கான பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

நிர்வாக முடிவுகளில் அதிக ஆதிக்கத்தை செலுத்துவது டாடா கம்யூனிகேஷன் மற்றும் டாடா டெலி ஆகிய இரு நிறுவனங்கள் கொண்டிருப்பதால், ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை பல கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். என்டிடி டோகோமோ (NTT DOCOMO) என்கிற ஜப்பானிய நிறுவனம் டாடா டெலி நிறுவனத்தில் 26% பங்குகளைக் கொண்டு மேலும் புட் ஆப்ஷன் (PUT OPTION)என்று சொல்லபடக் கூடிய குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ஒத்துக்கொண்ட விலையில் பங்குகளை விற்கும் உரிமையினையும் கொண்டுள்ளது. மேலும் டோகோமோ நிறுவனம் தனது புட் ஆப்ஷனுக்கு ஒரு வருட நீட்டிப்பு வழங்கி, வோடஃபோன் நிறுவனத்துடனான ஒப்பந்தததிற்கான பேச்சு வார்த்தைக்கு சுலபமான வழியை உருவாக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா டெலி மற்றும் வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தததிற்கான பேச்சு வார்த்தை ஜனவரி 3 2014 அன்று நடை பெறும் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் 26% பங்குகளை கொண்டுள்ள மத்திய அரசு, வோடஃபோன் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தையில் பங்கு பெறும் உரிமையினையும் பெற்றுள்ளது. டாடா குழுமம் தனது நிறுவனத்திலுள்ள அரசின் பங்குகளை வாங்கி, பின் இங்கிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனத்திற்கு விற்கிறது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தை டாடா நிறுவனத்திற்கும் அரசிற்கும் இடையே நடை பெறும். இதனிடையே டாடா கம்யூனிகேஷனின் ஆப்பிரிக்க நிறுவனமான நீயோடெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை வோடஃபோனின் வோடகாம் நிறுவனத்திற்கு விற்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications