மும்பை: இந்திய பங்கு சந்தை களைகட்டும் இந்த வேளையில் நாம் எப்போதும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐடி நிறுவனங்களின் பங்குகளின் நிலை என்ன??. ஒரு வழியாக மோடி பெருவாரியான இடங்களில் வெற்றிவாகை சூடும் இவ்வேலையில் ஐடி நிறுவன பங்குகள் அனைத்துமே சரிவை தழுவியது.
இதில் முக்கியமாக இந்தியாவின் டாப் மென்பொருள் நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், டிசிஎஸ், எச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா அகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிந்தது குறிப்பிடதக்கது. அதேவேலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ், மற்றும் குஜராத் நிறுவனமான அதானி குழுமத்தின் அத்தனை நிறுவனங்களும் அதிகப்படியான உயர்வை சந்தித்தது.
சரிந்ததில் இன்போசிஸ் தான் டாப்
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு கடந்த ஒரு வாரகாலமாகவே சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஐடி துறையில் அதிகளவில் சரிந்த நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்போசிஸ் நிறுவன பங்குகள் 2.37 சதவீதம் சரிந்து 3,192.85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்துடன் விப்ரோ கடும் போட்டி
இந்த இரண்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆடர்களை பிடிப்பதில் மயீர் பிடி சண்டை போடுவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று, குறிப்பாக இவ்விறு நிறுவனங்களில் விற்பனை பரிவில் வேலை செய்யும் நபர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இப்போட்டி ஆடர்களை பிடிப்பிதில் மட்டும் அல்ல பங்கு சந்தையிலும் தான். இன்போசிஸ் 2.37 சதவீதம் சரிந்தது போல விப்ரோ நிறுவனமும் 2.29 சதவீதம் சரிந்துள்ளது.
எச்சிஎல்
இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுக்கு மத்தியில் இப்போது எச்சிஎல் நிறுவனம் மிகவும் வேகமான வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகளும் 2.24 சதவீதம் சரிந்துள்ளது.
தப்பித்தது ஹெக்ஸாவேர் மட்டும் தான்
இந்த அடியில் லாபத்தை எட்டிப் பார்த்த நிறுவனங்கள் சில நிறுவனங்கள் மட்டுமே அதில் ஹெக்ஸாவேர், சாஸ்கன் கம்யூனிகேஷ்ன் மற்றும் மாஸ்டெக் அகிய நிறுவனங்கள் மட்டும் தான். இந்நிறுவனங்களில் முதலீடு செய்யதால் அதிகப்படியான லாபம் எதும் பார்க்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
அப்ப டிசிஎஸ் என்ன ஆச்சு??
இந்த சுரக்காத்தில் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா?? டிசிஎஸ் நிறுவனமும் சுத்தி சுத்தி அடிவாங்கியது. இத்தகைய அடியில் டிசிஎஸ் நிறுவனம் 1.15 சதவீதம் மட்டுமே சரிந்தது தப்பித்துக்கொண்டது.
அதிக லாபம் பெற்ற நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் சிறப்பாக செய்லபட்டது, இதனால் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, மற்றும் எச்டிஎஃப் ஆகிய வங்க பங்குகள் தளா 5% முதல் 6% உயர்வை எட்டியது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ், அதானி நிறுவனம், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகளும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வர்த்தக உச்சியை எட்டியது.
இன்றைய டார்கெட்
பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று வங்கித் துறை, பெரு நிறுவனங்கள், கட்டுமானத்துறை பங்குகளில் முதலீடு செய்தால் லாபத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications