மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்திய சந்தையில் பங்கு விற்பனையின் மூலம் சுமார் 9,880 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
தனியார் வங்கிகளில் சந்தை மதிப்பு அதிகம் கொண்ட இந்நிறுவனம் சில வெளிநாட்டு வங்கிகளின் துணையுடன் இன்று பங்கு விற்பனையில் இறங்கியது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்த பங்குகளை QIP மற்றும் அமெரிக்க டெப்பாசிட்டரி ஷேர்ஸ் முலம் பல அன்னிய மற்றும் உள்ளாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா சந்தையில் முதலீடு செய்தனர்.

இப்பங்கு விற்பனையில் பார்க்லேஸ், ஜேஎம் பைனான்சியல், சிட்டி, ஜேபி மோர்கன், மற்றும் BofA-ML ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் இன்று 1 சதவீதம் அதிகரித்து 1,079.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இவ்வங்கியின் பங்குளை 22.47 சதவீதம் இந்நிறுவனத்தின் தாய் நிறுவனம் வைத்துள்ளது, 33.75 சதவீத பங்குகள் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வைத்துள்ளது, 16.84 சதவீத புள்ளிகள் ADRs/GDR ஆக உள்ளது, மீதமுள்ள பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications