மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி (நாளை) மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 473.47 புள்ளிகள் வரை உயர்ந்தது.
வியாழக்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மும்பை பங்குச்சந்தை மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது.
சென்செக்ஸ்
நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து பங்குச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கினர் இதனால் காலை வர்த்தக துவக்கம் முதலே 130 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.
473 புள்ளிகள் உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் சிரிய அளவிலான சரிவை சந்திக்கவில்லை, இதன் மூலம் சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரே நாளில் 473.47 புள்ளிகள் வரை 29,220.12 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 160.75 புள்ளிகள் வரை உயர்ந்து 8,844.60 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பை பங்கச்சந்தை
கடந்த ஒரு மாத வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை பிப்ரவரி 9ஆம் தேதி சென்செக்ஸ் 28,227.70 புள்ளிகள் வரை சரிந்தது. அதுமட்டும் அல்லாமல் கடந்த 19ஆம் தேதி முதல் சென்செக்ஸ் தொடர் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.
லாபம் அடைந்த நிறுவனம்
இன்றைய வர்த்தகத்தில் பொரும்பாலான நிறுவனங்கள் உயர்வை சந்தித்தது. இதில் டாடா பவர் நிறுவனம் மட்டும் 5.43 சதவீத உயர்வை சந்தித்தது. இதை தொடர்ந்து எல்&டி, ஐசிஐசிஐ வங்கி, sesa sterlite ஆகிய நிறுவன 4.0 சதவீதத்திற்கு மேல் உயர்வை சந்தித்தது. இதில் இன்போசிஸ் மற்றும் டிசிஸ் நிறுவனம் குறைந்த அளவிலான உயர்வை மட்டும் சந்தித்தது குறிப்பிடதக்கது.
சரிவடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ, ஐடிசி மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications