மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி (நாளை) மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 473.47 புள்ளிகள் வரை உயர்ந்தது.
வியாழக்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மும்பை பங்குச்சந்தை மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது.
சென்செக்ஸ்
நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து பங்குச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கினர் இதனால் காலை வர்த்தக துவக்கம் முதலே 130 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.
473 புள்ளிகள் உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் சிரிய அளவிலான சரிவை சந்திக்கவில்லை, இதன் மூலம் சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரே நாளில் 473.47 புள்ளிகள் வரை 29,220.12 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 160.75 புள்ளிகள் வரை உயர்ந்து 8,844.60 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பை பங்கச்சந்தை
கடந்த ஒரு மாத வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை பிப்ரவரி 9ஆம் தேதி சென்செக்ஸ் 28,227.70 புள்ளிகள் வரை சரிந்தது. அதுமட்டும் அல்லாமல் கடந்த 19ஆம் தேதி முதல் சென்செக்ஸ் தொடர் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.
லாபம் அடைந்த நிறுவனம்
இன்றைய வர்த்தகத்தில் பொரும்பாலான நிறுவனங்கள் உயர்வை சந்தித்தது. இதில் டாடா பவர் நிறுவனம் மட்டும் 5.43 சதவீத உயர்வை சந்தித்தது. இதை தொடர்ந்து எல்&டி, ஐசிஐசிஐ வங்கி, sesa sterlite ஆகிய நிறுவன 4.0 சதவீதத்திற்கு மேல் உயர்வை சந்தித்தது. இதில் இன்போசிஸ் மற்றும் டிசிஸ் நிறுவனம் குறைந்த அளவிலான உயர்வை மட்டும் சந்தித்தது குறிப்பிடதக்கது.
சரிவடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ, ஐடிசி மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications