டெல்லி: பங்குதாரர்களுக்கு அளிக்க வேண்டிய 20,000 கோடி ரூபாயை அளிக்காமல் ஊழல் வழக்கில் சிக்கிய சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய், பெயில் பெற 10,000 கோடி நிதியை 14 மாத சிறைவாசத்திற்குப் பிறகு திரட்டியுள்ளார்.
அடுத்த வாரம் பெயில் மனுவின் விசாரணையின் போது நிதிமன்றம் அறிவித்த 10,000 கோடி ரூபாய் தொகையை (5,000 கோடி தொகை மற்றும் 5,000 கோடி ரூயாக்கான வங்கி உத்திரவாதம்) செலுத்திவிட்டு தனது சிறைவாசத்தை முடிக்க உள்ளார்.
14 மாத சிறைவாசம்
சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு சகாரா நிறுவனத்தின் மீது 20,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கை தொடுத்தது.
இதன் பெயரில் நிதிமன்றம் இந்நிறுவனத் தலைவர்கள் மூவரை கைது செய்ய நிதிமன்றம் உத்தரவிட்டது.
கைது
பல மாத ஏய்ப்பிற்குப் பின், வழியில்லாமல் இந்நிறுவனத் தலைவர்கள் சுப்ரதா ராய், அசோக் ராய் சவுதிரி மற்றும் ரவி சங்கர் துபே ஆகியோர் தத்தம் வீடுகளில் போலீஸில் சரண் அடைந்தனர்.
5 ஸ்டார் ஜெயில்
இந்த 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவன சொத்துக்களை விற்பதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், சப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களுக்குப் பல லட்ச செலவில் சகல வசதிகளும் திகார் ஜெயிலில் வழங்கப்பட்டது.
5,000 கோடி ரூபாய்
கடந்த வாரம் சாதார நிறுவனம் அளித்த தகவலின் படி, சுப்ரதா ராய் உட்பட இரு தலைவர்களுக்குப் பெயில் பெற 3800 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தது.
கபில் சிபில்
தற்போது ராய் தரப்பில் நிதிமன்றத்தில் ஆஜராக உள்ள உயர் வழக்கறிஞர் கபில் சிபில் கூறுகையில், 5000 கோடி ரூபாய் நிதியும், 5000 கோடி ரூபாய்க்கான வங்கி உத்திரவாதமும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
வங்கி
சுப்ரதா ராய் அவர்களுக்குப் பெயில் பெற நிதிமன்றம் 5000 கோடி ரூபாய்க்கான நிதியுதவியைக் கோரியது. தற்போது வங்கிகள் அளிக்க உறுதியளித்தாலும், வங்கிகளின் பெயர்களைச் சகாரா நிறுவனம் அளிக்க மறுத்துவிட்டது.
நிதிபதிகள்
வங்கி உத்திரவாதத்திற்கான அறிக்கையைக் கபில் சிபில் நிதிபதிகள் தாகுர், டேவ் மற்றும் சிக்ரி முன் அளித்துள்ளதாக, சிறிய திருத்தங்களுடன் அவை உறுதியாகிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications