மும்பை: இந்தியாவில் வரலாறு காணாத அளவில் வீட்டு மனைகளின்விலை உயர்ந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. இதேநிலையில் கடந்த 10 வருடங்களில் பொரும்பாலான மக்கள் வீடுவாங்கும் அளவிற்கு வீட்டு மனைகளின் விலை நிலை உள்ளதாகவும்ஹெச்டிஎஃப்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்ப்போம்...
எம்புட்டு..
இந்திய பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், சராசரி வீட்டுமனைகளின் விலை 52 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் வீடுவாங்கும் வாடிக்கையாளர்களின் சராசரி வருமான நிலையும் வராலாறுகாணாத அளவில் உயர்ந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
ரூ.12 லட்சம் வருடாந்திரா வருமானம்
வீட்டு மனைகளின் விலை உயர்ந்ததுபோல், வீட்டு மனைகள்வாங்குவோரின் வருமான நிலையும் உயர்ந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சிதெரிவித்துள்ளது. இதன் படி வருடாந்திர வருமான அளவு 12 லட்சம்ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மலிவு விலை நிலை...
வாடிக்கையாளர்களின் வருமான நிலை மற்றும் விட்டு மனைகள்விலைநிலையை ஒப்பட்டுப் பார்க்கும்போது மலிவு விலை நிலை 4.4சதவீதமாக உள்ளது.
கடந்த 10 வருடத்தில் 2004ஆம் ஆண்டு தான் மிகவும் குறைவான 4.3சதவீதம் என்ற விலை நிலையைப் பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தை
பணியாளர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை, வங்கி வட்டிவகிதத்தில் தளர்வு, போன்றவை இந்தியாவில் வீட்டு மனைகள் அதிகம்வாங்கும் எண்ணத்தை அதிகரித்துள்ளதாக ஹெச்டிஎஃப்சிதெரிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி
இந்நிறுவனத்தின் 2014ஆம் நிதியாண்டின் கணக்குப்படி வீட்டுமனைகளுக்காக 2,54,000 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது. மேலும்கடன் அளிப்பு அளவு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 2014ஆம்வருடம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சராசரி கடன் அளவு
இந்நிறுவனத்தின் சராசரி கடன் அளவு 23.3 இலட்சமாக உள்ளது. கடந்த35 வருடத்தில் இந்நிறுவனம் சுமார் 4.9 மில்லியன் வீடுகளுக்குக் கடன்அளித்துள்ளது.
வி.ஆர்.எஸ்