மும்பை: 'லேமென் பிரதர்ஸ்', இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல் தோன்றுகிறதா? சரி தான் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில் முழ்கிப்போன ஒரு அமெரிக்க முதலீடு நிறுவனம் தான் லேமென் பிரதர்ஸ்.
இதே போன்று இந்தியாவின் லேமென் பிரதர்ஸ் நிறுவனமாக ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளை ரிசர்வ் வங்கி சித்தரித்துள்ளது. ஏன் அப்படி அறிவித்தது. வாங்க பார்ப்போம்...
ரிசர்வ் வங்கி
2008ஆம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி அமைப்பில் D-SIB (Domestic Systemically Important Banks) என்னும் செயல்முறையைக் கொண்டு வந்தது. ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் முடங்குவதால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை பாதிக்கப்படும் நிலையில் இத்தகைய நிறுவனங்களை D-SIB பட்டியலில் இணைக்கப்படும்.
இதன் படியே ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகளை லேமென் பிரதர்ஸ் ஆக அறிவித்துள்ளது.
எப்படி வங்கிகள் முடங்கும்?
வங்கிகள் கடன் மற்றும் வர்த்தக அளவு பாதிக்கப்படும் நிலையில், அதனைச் சரிசெய்யும் அளவிற்கு வங்கியின் நிதிநிலை போதிய அளவிற்கு வலிமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் வங்கி முடங்கும் நிலை ஏற்படும்.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ
இந்நிலையில் இந்திய சந்தையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வங்கிகளின் வர்த்தகம், இருப்பு அளவுகள் போன்ற பல காரணிகளைக் கணித்து ரிசர்வ் வங்கி 2015ஆம் நிதியாண்டுக்கான D-SIB பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.
இதனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி பதில்..
எங்கள் வங்கி அமைப்பில் ஆபத்து காரணிகளை எதிர்கொள்ளும் அளவிற்குப் போதிய நிதி இருப்புகள் உள்ளதால் வங்கி செயல்பாடு எந்த வகையிலும் இந்திய பொருளாதாரத்தைச் சரிவு பாதைக்கு ஈட்டுச்செல்லாது என ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டில்
ரிசர்வ் வங்கி 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட D-SIB பட்டியலில் 4 முதல் 6வங்கிகளை ஆர்பிஐ இணைந்தது. இதன் மூலம் வங்கிகள் ஆபத்துகளை எதிர்கொள்ள அதிகளவிலான மூலதன இருப்பை வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன.
ஏப்ரல் 1, 2016
இந்திய வங்கிகள் தங்களது மூலதன இருப்பை அதிகரிக்கும் சட்டம் வருகிற ஏப்ரல் 1, 2016 ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
வங்கிகள் நிலை..
D-SIB பட்டியலில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை இணைப்பதன் மூலம் இதன் லாப விகிதத்தில் பாதிப்பு இருக்காது என முன்னாள் எஸ்பிஐ வங்கித் தலைவர் பிரதீப் சவுதிரி தெரிவித்துள்ளார்.
இதை எப்படிச் சரி செய்வது..
இந்நிலையை எளிமையாகச் சரி செய்ய வங்கிகள் பங்குச்சந்தையில் தங்களது பொது விநியோக பங்குகளை அதிகரிப்பதன் மூலம் நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
இதன்படி எஸ்பிஐ 0.8 சதவீதம் வரை தங்களது பங்குகளை அதிகரிக்க வேண்டும். இதேபோல் ஐசிஐசிஐ வங்கி 0.2 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications