மும்பை: ஷாப்பிங் என்றால் டி நகர், பாண்டி பஜார் செல்ல வேண்டும் என்பதை மறக்கும் அளவிற்கு இந்தியாவில் ஈகாமர்ஸ் ஆதாவது இணையதள வர்த்தகத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்கு மிகவும் அதிகம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
இந்நிலையில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளதால் இந்நிறுவன தலைவர்கள் நாட்டின் புதிய பில்லியனர்களாக உருவாகியுள்ளனர்.
1.3 பில்லியன் டாலர்
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் தலா 1.3 பில்லியன் டாலர் (8,582 கோடி ரூபாய்) சொத்து மதிப்புடன் நாட்டின் புதிய பில்லியனர்களாக உருவாகியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
86 வது இடம்..
இந்திய ஈகாமர்ஸ் துறையில் முதல் பில்லியனர்களாக உருவாகியுள்ள பிளிப்கார்ட் தலைவர்கள் முதல் முறையாக ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் டாப் 100 பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இப்பட்டியலில் 86 வது இடத்தையும் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாப் 5 இடங்கள்
இந்நிலையில் இப்பிட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், திலீப் சங்வி, எஸ்.பி ஹிந்துஜா மற்றும் குடும்பம், ஷிவ் நாடார், பலோன்ஜி மிஸ்திரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
100 பில்லியனர்கள்
இந்தியாவில் டாப் 100 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 345 பில்லியன் டாலராக உள்ளது.
ஹூரன் நிறுவனம்...
சரி, இந்திய பணக்காரர்களைப் பற்றிச் சீனா ஆய்வு நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்கள் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்..
நாங்க அப்படி ஒன்றும் செய்யவில்லை..
ரூ.16,000 கோடி திட்டம்...
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..