டெல்லி: இந்திய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் நாட்டில் அன்னிய முதலீட்டு அளவுகளைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு, இந்திய வங்கிகளில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில் அன்னிய முதலீட்டு அளவுகளைக் கண்காணிக்கும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை அளித்த இப்பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
100 சதவீத அன்னிய முதலீடு
இந்திய வங்கிகளில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற முக்கியமான வங்கிகளுக்கு மிகவும் சாதகமாக அமையும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்
இப்பரிந்துரை குறித்து ரிசர்வ் வங்கி முழுமையான விளக்கம் அளிக்காவிட்டாலும், சில மாதங்களுக்கு வங்கிகளில் அன்னிய முதலீட்டு அளவுகள் உயர்த்தும் முயற்சியில் அரசு இறங்கிய போது ரிசர்வ் வங்கி...
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ஒரு குறுகிய கால முதலீட்டாளர்கள், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எவ்வித தடையும் இன்றி எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை வெளியேற்றலாம். இத்தகையவர்களை நம்பி நாட்டின் முக்கியத் துறையில் அன்னிய முதலீட்டு அளவுகளை உயர்த்துவது உகந்தது அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
லாபம் மட்டுமே..
மேலும் எப்ஐஐ எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அனைவரும் லாப நோக்கத்திலேயே செயல்படுபவர்கள், அதனால் நீண்ட கால முதலீட்டை எதிர்பார்க்கு இந்திய வங்கிகளுக்கு இவர்களின் முதலீடு உதவாது.
தனியார் வங்கிகள்
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் தனியார் வங்கிகள் அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகளை எதிர்பார்த்து வருகிறது. சமீபத்தில் 74 சதவீத அன்னிய முதலீடு அளவுகளில் நாட்டின் முக்கியத் தனியார் வங்கியான எச்டிஎப்சி சில பிரச்சனைகளைச் சந்தித்தது.
74% அன்னிய முதலீடு
இந்திய வங்கித்துறையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களின் படி, தனியார் வங்கிகளில் 74 சதவீத நேரடி அன்னிய முதலீடாகவும், இதில் 49 சதவீத முதலீடு அட்டோமேடிக் வாயிலாகவும் முதலீடு பெறலாம்.
வங்கிகளில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் 49 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ள FIPB அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
முதல் இடத்தில் ஐசிஐசிஐ வங்கி..
தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியில் 53.9 சதவீத பங்குகள் அன்னிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது. இதேபோல் எச்டிஎப்சி வங்கியில் 39.9%, ஆக்சிஸ் வங்கியில் 43.8%, எஸ் வங்கியில் 41.3 சதவீதம், கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 34.7 சதவீத பங்குகள் அன்னிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications