டெல்லி: நீரவ் மோடி போன்று டெல்லியில் இருந்தும் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 389.85 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்துள்ள விவரங்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஷி இருவரும் மோசடி செய்துள்ளதாக நாடு முழுவதும் பரப்பாராகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே ரோட்டாமேக் பேனா நிறுவனர் மோசடி செய்துள்ள தகவல் வெளிவந்துள்ள நிலையில் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் புதியதாக ஒரு புகாரினை சிபிஐ வசம் அளித்துள்ளது.
வழக்குப் பதிவு
புகாரினை பெற்றுள்ள சிபிஐ துவராகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாதிரித்து வருகிறது.
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் நிறுவனம் புகார் அளித்து 6 மாதங்களுக்குப் பிறகு சிபிஐ இது குறித்துத் தற்போது விசாரணைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அதன் பேரில் நிறுவனத்தின் தலைவர்களான சபா சேத், ரீட்டா சேத், கிருஷ்ணா குமார் சிங், ரவி சிங் மீது எல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி
ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் நிறுவனத்தில் 2001 ஆம் ஆண்டுமுதல் 2012-ம் ஆண்டு வரை பல முறை மோசடியாகக் கடன் வழங்கப்பட்டுள்ளது அதன் மதிப்பு 389 கோடி ரூபாய் என்றும் கூறுகின்றனர்.
நீரவ் மோடி
நீராவ் மோடி எப்படி வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்காக LoCs அனுமதிகளில் மோசடி செய்து கடன் பெற்றாரோ அதே போன்று ஓரினட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியும் அளித்துள்ளது.
பரிவர்த்தனைகள்
மோசடியில் சிக்கியுள்ள இந்த நிறுவனமானது பதிவு செய்யப்படாது நிறுவனங்கள் பெயரில் எல்லாம் பரிவர்த்தனை செய்துள்ளதாகக் கணக்கைக் காண்பித்து வருகிறது என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications