ஹைதராபாத்தில் உள்ள லாலில் ஒரே அறையில் 114 போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், சத்யம் மோசடியில் தண்டிக்கப்பட்ட ராமலிங்க ராஜூவின் குடும்பத்திற்குத் தொடர்பிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு முகவரி- பல நிறுவனங்கள்
ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் பர்ச்சூன் மொனார்க் மால் என்ற வணிக வளாகத்தில் கம்பெனி விவகாரங்கள் துறையின் ஆணையின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். எஸ்.ஆர்.எஸ்.ஆர் அட்வைசரி சர்விஸ் என்று முகவரியிடப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்தபோது, 114 நிறுவனங்கள் செயல்பட்ட அதே அறையில் இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 25 ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர். இது சத்யம முறைகேடு வழக்கில் சிக்கிய ராமலிங்க ராஜூவின் உறவினர்களுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சட்ட விரோதச் செயல்
இது தொடர்பாகப் பேசிய அதிகாரி ஒருவர், ஒரே முகவரியில் இயல்புக்கு மாறான வகையில் பல கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆந்திரா தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மோசடி நடைபெற்றுள்ளது. எந்தவொரு நபரும் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பதிவு செய்யக்கூடாது என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது., இது தவிர ஒருவர் பல நிறுவனங்களுக்கு இயக்குநராகச் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
விசாரணை தொடக்கம்
இந்தப் போலி நிறுவனங்களுக்கு எஸ்.ஆர்.எஸ்.ஆர் அட்வைசரி பிரைவேட் லிமிடெட் கணக்கு வழக்குகளைப் பராமரித்துள்ளது. ஒரே முகவரியில் பல நிறுவனங்கள் செயல்படுவது சட்டத்துக்குப் புறம்பானது. இது தொடர்பாகத் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். எஸ்.ஆர்.எஸ்.ஆர் நிறுவனம் ராமலிங்க ராஜூவுக்குச் சொந்தமானது என்று அதிகாரிகள் கூறினர்
யார் அந்த ராமலிங்கராஜூ
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்கராஜூ, முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கில் கம்பெனி லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதாக 2009 இல் பிடிபட்டார். பங்குதாரர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனையும், 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications