கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா மாநிலத்தை, 1924 க்குப் பிறகு புரட்டிப் போட்டுள்ள இயற்கைப் பேரழிவு 300 க்கும் மேற்பட்ட மக்களைக் காவு வாங்கியதுடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை முகாம்களில் தள்ளி முடக்கி போட்டுள்ளது.
தண்ணீருக்குள் தத்தளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் அக்டோபர் மாதத்திற்குள் இயல்பு நிலைக்குத் திரும்பாவிட்டால், 4 முதல் 5 விழுக்காடு வரை மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் சரிவடையும் என்ற அச்சம் நிலவுகிறது.
விமான நிலையம் மூடல்
கடந்த 8 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்கள் விடாது பெய்த கனமழையால் வீடுகளில் மட்டுமல்லாமல் விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் கொச்சின் விமான நிலையம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. 29 ஆம் தேதி சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 52 சதவீத சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கொச்சின் மற்றும் எர்ணாகுளம் 2 வாரங்களாகத் தண்ணீருக்குள் தத்தளித்தது.
வளர்ச்சி விகிதம் சரிவு
முதல் காலாண்டில் 17% வளர்ச்சியைப் பெற்ற கேரளா, நிபா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் முதல் மே மாதங்களில் 14 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக அம்மாநில சுற்றுலா இயக்குனர் பி பாலா கிரண் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் இயல்பு நிலை திரும்பினால் வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கலாம் என்ற அவர், அப்படியொரு நிலைமை ஏற்படாவிட்டால் 4 முதல் 5 விழுக்காடு வரை வீழ்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
சுற்றுலாத்துறையின் பங்கு
2017 ஆம் ஆண்டுச் சுற்றுலாத்துறையில் 10.94 சதவீத வளர்ச்சியை எட்டியது கேரளா. 1.91 மில்லியன் வெளிநாட்டு பயணிகளும், 14.6 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் கேரளாவுக்குப் படையெத்தனர். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்தது.
நீலக்குறிஞ்சிக்கு ஆபத்து
12 ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் அடுத்த மாதம் பூக்க இருக்கிறது. குறிஞ்சி மலர் அதிகம் பூக்கும் மூணாறு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படகுப்போட்டி ரத்து
வெள்ளப்பாதிப்புக் காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நேரு கோப்பைக்கான படகுப்போட்டியை கேரள அரசு ரத்து செய்துள்ளது.இது வெளிநாட்டவரையும், சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் விளையாட்டாகும்.
பாம்பு படகுபோட்டி
வேட்பநாடு ஏரியில் நடைபெற்ற ஆலப்புழா பாம்புப் படகு போட்டி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வருகையால் புகழ் பெற்றது. ஆகஸ்டு மாதம் மத்தியில் நடைபெறும் இந்தப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications