35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜன் தன் வங்கித் திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி கோடிக்கணக்கில் வங்கிக் கணக்குகள் இலவசமாக தொடங்கப்பட்டன. இதனை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இதன் டெபாசிட் தொகை 1 லட்சம் கோடி ரூபாயை நெருங்க உள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நிலவரப்படி வங்கி கணக்கில் டெபாசிட் 97,665.66 கோடி ரூபாய் இருந்துள்ளது. இதுவரை 35.39 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 27ஆம் தேதி நிலவரப்படி, டெபாசிட் தொகை மட்டும் 96,107.35 கோடி ரூபாயாகும். இதற்கு முந்தைய வார நிலவரப்படி, 95,382.14 கோடி ரூபாய் இருந்தது. இதில் 27.89 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு

ஏப்ரல் 11, 2018 தேதி கணக்கின்படி வங்கிக் கணக்குதாரர்களின் எண்ணிக்கை 31.45 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வரை 80,545.70 கோடி ரூபாய் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்தின் தகவல் தெரிவித்துள்ளது.

வீபத்துக் காப்பீடு ரூ.2லட்சம்
கடந்த ஆகஸ்ட் 28, 2014ல் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே அனைத்து குடும்பத்தினரும் வங்கி வசதிகளை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விபத்து காப்பீட்டு தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஆகஸ்ட் 28, 2018க்கு பிறகு திறக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பொருந்தும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா
பணம் எடுக்கும் வரம்பு அதிகரிப்பு
இந்த நிலையில் அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பு 10,000 ரூபாய் என இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு இல்லத்திற்கும் என்பதில் இருந்து, ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வங்கிக் கணக்கு என்று கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஜன் தன் வங்கி கணக்குகளை பெண்கள் வைத்துள்ளனர்.

கிராமப்புறங்களில் 50% கணக்குகள்
இதில் 50 சதவிகித வங்கிக் கணக்குகள் கிராமப்புற மற்றும் பாதி - நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேமிப்பு, கிரெடிட், காப்பீடு, ஓய்வூதியம், குறைந்தபட்ச வருமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் வண்ணமும் இந்த ஜன் தன் வங்கிக் கணக்கில் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Deposits in Jan Dhan accounts fast inching towards Rs 1 lakh crore

The total deposits in bank accounts opened under the Jan Dhan scheme, which was launched about five years ago by the Modi-government, are set to cross Rs 1 lakh crore soon. The total balance in the Jan Dhan accounts, which has been steadily rising, was at Rs 97,665.66 crore as on April 3, as per the latest government data.
Story first published: Sunday, April 21, 2019, 20:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X