லண்டன் : இன்று நம்மில் பலர் ஷாப்பிங் செய்யும் போது பெரும்பாலும் பொருட்களை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து தான் வாங்குகிறோம். ஏனெனில் காலாவதியான பொருட்களை உண்டு அதனால் எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற கவலை இருக்கிறது. ஆனால் லண்டனில் உள்ள பெரியவர்கள் காலாவாதியான பொருட்களைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று ஒர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாம்.
ஆமாங்க.. 2000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பலர் பாலாடைக்கட்டி காலாவதி தேதி முடிவடைந்து இருந்தாலும், தேதி முடிவடைந்த பின்னரும் கூட 10 நாட்களுக்கு விரும்பி உண்ணுகிறார்களாம். அதே ரொட்டி துண்டுகள் காலாவதி தேதிக்கும் பின்னரும் கூட 5 நாட்கள் கழித்தும் உண்ணப்படுகிறதாம். இதே மீன்கள் 3 நாட்களுக்கு பின்னர் வரை உண்ணப்படுகிறதாம்.

இதே போல வென்ணெயையும் 10 நாட்களுக்கு பின்பும் கூட உபயோகப் படுத்துகிறார்களாம். இங்கிலாந்தில் இன்றளவிலும் கூட பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு காலாவதி தேதி முடிவடைந்தாலும் கூட உணவு பொருட்களை வீணடிப்பதில்லையாம் பார்த்துக்கோங்க.
இதற்கு காரணம் அதிகளவு உணவு பொருட்கள் வீணாகிறது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், செலவும் அதிகம் ஆகிறது என்ற கவலையும் இருக்கிறதாம்.
அதே சமயம் இந்த ஆய்வில், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் இவ்வாறு காலாவதியாகும் பொருட்களை, தூக்கி எறிந்து விடுவது தெரிய வந்துள்ளது.
அதிலும் மற்ற பொருட்களை விட பால் ரொட்டி தான் அதிகளவில் வீணாவது கண்டறியப்பட்டுள்ளதாம். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 490 மில்லியன் பின்ட்ஸ் (லிட்டர் அளவு போன்றது). அளவு பால் வீணாகிறாதாம். ஒரு பின்ட்ஸ் என்பது கிட்டதட்ட 0.47 லிட்டராகும்.
மேலும் இந்த ஆய்வில் 35% பேர் தங்களுக்கு உணவு பொருட்கள் அவசியம் என்றால் மட்டுமே வாங்குகிறார்களாம். 29% தங்களுக்கு எது நல்லது, எது நீண்ட ஆயிளைக் கொண்ட பொருட்கள் என்று பார்த்து பார்த்து பொருட்களை வாங்குகிறார்களாம்.
உணவுப்பொருட்கள் இவ்வாறு வீணாவதை தடுப்பதில் எவ்வளவு தான் நடவடிக்கைகள் எடுத்தாலும், 10ல் 6 பேர் உணவு பொருட்களை எப்படியேனும் வீணடிக்கிறார்களாம். இதை அவர்களே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்களாம்.
More From GoodReturns

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications