600 Illegal Lending Apps Found By RBI. Details here | 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்: என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி?
ஒரே நிமிடத்தில் பணம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் பல ஆப்ஸ்கள் தற்போது இணையதளங்களில் உலா வருகின்றன.
இந்த ஆப்ஸ்களிடம் கடன் வாங்கும் அப்பாவி மக்கள் அதன்பிறகு படும் அல்லல்கள் சொல்லி மாளாது என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் சட்டவிரோத கடன் வழங்கும் 600 ஆப்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத ஆப்ஸ்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் கடந்த வாரம் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ் குறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இந்திய ரிசர்வ் வங்கிக்கு சட்டவிரோத ஆப்ஸ்கள் குறித்து ஏராளமான புகார்கள் வருவதாகவும், ஆனால் அதே நேரத்தில் அந்த ஆப்ஸ்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாதவை என்பதால் அதன் மீது ரிசர்வ் வங்கி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
கண்காணிப்பு
ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற மோசடிகள் குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தி இருந்தார். இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டவிரோதமாக கடன் வழங்கி மக்களை ஏமாற்றுவதோடு, பயமுறுத்தி வருவது குறித்து ஏராளமான புகார் வந்ததால் சட்டவிரோத ஆப்ஸ்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
600 ஆப்ஸ்கள்
இந்த நடவடிக்கையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழு விசாரணையில் இறங்கிய நிலையில், தற்போது 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்கள் இயங்கி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகார்கள்
இதுவரை 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து மேலும் பல ஆப்ஸ்கள் புதிதாக தோன்றும் வாய்ப்பு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அமைத்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மோசடியான ஆப்ஸ்கள் மீது கடந்த ஒரு வருடத்தில் 2500 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த நடவடிக்கையால் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications