600 Illegal Lending Apps Found By RBI. Details here | 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்: என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி?
ஒரே நிமிடத்தில் பணம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் பல ஆப்ஸ்கள் தற்போது இணையதளங்களில் உலா வருகின்றன.
இந்த ஆப்ஸ்களிடம் கடன் வாங்கும் அப்பாவி மக்கள் அதன்பிறகு படும் அல்லல்கள் சொல்லி மாளாது என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் சட்டவிரோத கடன் வழங்கும் 600 ஆப்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத ஆப்ஸ்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் கடந்த வாரம் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ் குறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இந்திய ரிசர்வ் வங்கிக்கு சட்டவிரோத ஆப்ஸ்கள் குறித்து ஏராளமான புகார்கள் வருவதாகவும், ஆனால் அதே நேரத்தில் அந்த ஆப்ஸ்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாதவை என்பதால் அதன் மீது ரிசர்வ் வங்கி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
கண்காணிப்பு
ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற மோசடிகள் குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தி இருந்தார். இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டவிரோதமாக கடன் வழங்கி மக்களை ஏமாற்றுவதோடு, பயமுறுத்தி வருவது குறித்து ஏராளமான புகார் வந்ததால் சட்டவிரோத ஆப்ஸ்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
600 ஆப்ஸ்கள்
இந்த நடவடிக்கையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழு விசாரணையில் இறங்கிய நிலையில், தற்போது 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்கள் இயங்கி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகார்கள்
இதுவரை 600 சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து மேலும் பல ஆப்ஸ்கள் புதிதாக தோன்றும் வாய்ப்பு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அமைத்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மோசடியான ஆப்ஸ்கள் மீது கடந்த ஒரு வருடத்தில் 2500 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த நடவடிக்கையால் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்ஸ்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications