பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டுக்கு 30 சதவீத கேபிடல் கெயின்ஸ் வரி விதித்துள்ளது. இது அதிகப்படியான வரி என்றாலும் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குத் தடை அறிவிக்காமல் வரி விதித்தது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிப்டோரகரன்சி மீது கூடுதலாக வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் கிரிப்டோ துறையைச் சார்ந்து இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட உள்ளது.
பட்ஜெட் அறிக்கை
மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு கிரிப்டோ துறையில் நடக்கும் பிற வர்த்தகம் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படத் திட்டமிட்டு வருகிறது.
கிரிப்டோகரன்சி உற்பத்தி
அதாவது கிரிப்டோகரன்சி உற்பத்தி முதல் அனைத்து வர்த்தகங்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்க மத்திய மறைமுக மற்றும் சுங்க வரித் துறை ஆலோசனை செய்ய உள்ளதாகவும், இதற்கான திட்ட வடிவத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் முன் வைத்துள்ளதாக CBIC அமைப்பின் தலைவர் விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி
கிரிப்டோ சந்தையில் பல சேவைகளுக்கும், பணிகளும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் நிலைப்பாடு உள்ளது, இதற்கான இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் போது கிரிப்டோ மீது மத்திய அரசு விதிக்கப்படும் மொத்த வரியின் அளவு மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை வரி
ஒரு தளம் அல்லது எக்ஸ்சேன்ஞ்ச் ஆபரேட்டரால் வழங்கப்படும் சேவைகளை அதாவது கிரிப்டோ முதலீடு, விற்பனை ஆகியவை வரி விதிக்கக்கூடிய சேவைகளாக அங்கீகரிக்கப்பட்டு முறையாக அதிகாரிகள் வரி விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை இந்தியாவில் இருக்கும் அனைத்து கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமும் பின்பற்றி வருகிறது.
ஆலோசனை
இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோ-வை உற்பத்தி அதாவது மைனிங் செய்வது சப்ளை பிரிவில் வருமா இல்லையா, உற்பத்தி செய்த கிரிப்டோ-வை விற்பனை செய்தால் இதை எப்படிக் கணக்கிடுவது. இது சப்ளை ஆப் மணி அல்லது சப்ளை ஆப் கூட்ஸ் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து CBIC ஆலோசனை செய்து அடுத்த 2-3 மாதத்தில் முடிவு எடுக்க உள்ளது என விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications