பொதுவாக உற்பத்தித் துறையில் பெண்களின் பங்கீடும் ஆர்வமும் குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக ஆட்டோமொபைல் துறையில் நிர்வாகப் பணிகளில் கூடப் பெண்களின் பங்கு குறைவாக இருக்கும்.
இந்த நிலையை எலக்ட்ரிக் வாகனங்கள் முற்றிலுமாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை, இத்துறையில் புதிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் பெண்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருகிறது.
இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாகவும், முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் துறை
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களே புதிய மாற்றமாக இருக்கும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெண்களை அதிகளவில் பணியில் சேர்த்து பாலின சமன்பாட்டை நிறுவனங்கள் எட்ட முயல்கிறது.
பெண்கள்
இந்த வகையில் எலக்ட்ரிக் வாகன துறையில் புதிதாக 10 பேரை பணியில் சேர்த்தால் அதில் 6 பேர் பெண்கள் தான். பெண்கள் EV துறையில் பிஸ்னஸ் மாடலிங், டிசைன் ரீடெவலப்மென்ட், ஈ மொபிலிட்டி, ரினியூவபிள் எனர்ஜி மேனேஜ்மென்ட் பிரிவில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
35 சதவீதம் அதிகச் சம்பளம்
மேலும் கிரீன் துறையில் பெண்களுக்கு மற்ற துறைகளைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகச் சம்பளம் அளிக்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு காலாண்டில் EV துறை சார்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 18 சதவீதம் அதிகப் பெண்களைப் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என Adecco தெரிவிக்கிறது.
டாடா மோட்டார்ஸ், MG மோட்டார்ஸ்
இந்திய EV கார் சந்தையில் 80 சதவீத வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் டாடா மோட்டார்ஸ் பெண்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது. இதேபோல் MG மோட்டார்ஸ் நிறுவனமும் தற்போது பெண்களை அதிகளவில் பணியில் சேர்க்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது. பல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பெண்கள் நிர்வாகக் குழு மற்றும் தலைமை பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.
3000 பெண்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சுமார் 3000 பெண்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் கார் முதல் கனரக வர்த்தக வாகனங்களில் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் புனே-வில் ஒரு assembly line-ஐ மொத்தமும் பெண்கள் இயக்கும் தளமாக மாறியுள்ளது. இந்த assembly line-ல் சுமார் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஓலா நிறுவனம்
இதேபோல் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் தொழிற்சாலை துவங்கிய நாளில் இருந்து அதிகப்படியான பெண்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இப்படி ஒவ்வொரு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும் பெண்களுக்கு அதிகளவிலான இடத்தைக் கொடுத்து பாலின சமநிலையை ஈடு செய்ய முயற்சி செய்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications