2020ல் பிட்காயின் வளர்ச்சியால் முதலீட்டாளர்களும், உலக நாடுகளும் வியப்பில் இருக்கும் நிலையில், கிரிப்டோகரன்சி முதலீட்டை முறைப்படுத்தப் பல நாடுகள் களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பிட்காயின் முதலீட்டின் மூலம் அதிகளவிலான வரி வருமானத்தைப் பெறத் திட்டமிட்டுள்ள மத்திய நிதியமைச்சகம் அதிக வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிட்காயின் மீது ஜிஎஸ்டி
மத்திய நிதியமைச்சகத்தின் முக்கியப் பிரிவாக விளங்கும் Central Economic Intelligence Bureau (CEIB) இந்தியாவில் பிட்காயின் மீது ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. எனவே பிட்காயின் பரிமாற்றங்கள் மீது 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளது.
18 சதவீத வரி
பிட்காயின் பரிமாற்றங்கள் மீது 18 சதவீத வரி விதிக்கப்படும் போது மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 7,200 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானம் கிடைக்கும் எனவும் CEIB அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்திற்குத் திங்க் டேங்க் அமைப்பாக விளங்கும் CEIB அமைப்பு, கிரிப்டோகரன்சி மற்றும் இந்தியாவில் அதன் வர்த்தகத்தை ஆய்வு செய்து ஜிஎஸ்டி வரி பரிந்துரையைச் செய்துள்ளது.
CEIB அமைப்பு
மேலும் CEIB அமைப்பு பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியை intangible assetsஆகப் பிரிக்கப்பட்டு அனைத்துப் பரிமாற்றங்கள் மீதும் வரி விதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஜிஎஸ்டி வரி கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும்.
மத்திய அரசுக்குச் சவால்
இந்தியாவில் கிரிப்டோகரன்சி முறைப்படுத்தப்படாமல் இயங்குகிறது, எனவே மத்திய அரசுக்கு இதைக் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
ரிசர்வ் வங்கி தடை
குறிப்பாகக் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் உதவுவதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதில் இருந்து அதிகளவிலான சவால்களை எதிர்கொண்டு வருகிறது மத்திய நிதியமைச்சகம்.
கட்டுப்பாட்டு அமைப்பு
இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த செபி இருப்பது போல் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்தியாவில் அமைப்பு இல்லை. இதனால் மத்திய அரசு இத்தளத்தைப் பெரிய அளவில் பணச் சலவைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதனாலேயே ரிசர்வ் வங்கிக்கு இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கத் தயங்குகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications