பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகளைத் தடுக்கத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் காரணத்தால் வரி வசூல் அளவீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாகக் கொரோனா தொற்று 2வது அலைக்குப் பின்பு வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை சரிவில் இருந்து மீண்டு வந்த போது ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
இதேவேளையில் கடந்த 2 வருடமாக ஜிஎஸ்டி அமைப்பு பல்வேறு சோதனைகளைச் செய்து மோசடிகளையும், ஏமாற்றுவோரையும் கண்டுப்பிடத்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
40,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு
2021ஆம் ஆண்டில் மட்டும் போலி பில் மற்றும் போலியான இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிளைம் ஆகியவற்றின் வாயிலாக மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதாக வரித்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்து உள்ளனர்.
ஜிஎஸ்டி வரி
இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜிஎஸ்டி வரியில் செய்யப்படும் மோசடிகளைத் தடுக்கவும், நடைமுறையில் இருக்கும் சில ஓட்டைகளைத் தடுக்கவும் சில முக்கியமான மாற்றங்களும், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்த உள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், இதேவேளையில் மத்திய அரசின் Ease of Doing Business நடைமுறைகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
5,700 வழக்குகள்
மத்திய அரசின் மறைமுக வரித்துறை, சுங்கவரி துறை ஜிஎஸ்டி அமைப்பின் சென்டரல் நிர்வாக அமைப்பு கடந்த சில வருடங்களாகச் செய்யப்பட்ட சோதனையில் 5,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரி மோசடி செய்யப்பட்டு உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வரி வருமானம் சரிவு
மத்திய அரசுக்கு கடந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவின் வாயிலாகவும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதன் வாயிலாகவும் அதிகளவிலான வரி வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சரிவைச் சமாளிக்கப் பல முக்கியமான வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 1 முதல்
இதேவேளையில் வரி மோசடிகளைத் தடுப்பதன் வாயிலாகவும் அதிகப்படியான வரியை வசூல் செய்ய முடியும் என்பதைப் பெரிய அளவில் நம்பும் மத்திய அரசு ஜனவரி 1 முதல் பல முக்கியக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
2021 வரி வசூல்
ஜனவரி -ரூ. 1,19,847 கோடி
பிப்ரவரி - ரூ. 1,13,143 கோடி
மார்ச் - ரூ. 1,23,902 கோடி
ஏப்ரல் - ரூ. 1,41,384 கோடி
மே - ரூ. 1,02,709 கோடி
ஜூன் - ரூ. 92,849 கோடி
ஜூலை - ரூ. 1,16,393 கோடி
ஆகஸ்ட் - ரூ. 1,12,020 கோடி
செப்டம்பர் - ரூ. 1,17,010 கோடி
அக்டோபர் - ரூ. 1,30,127 கோடி
நவம்பர் - ரூ. 1,31,526 கோடி
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications