கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இன்று காலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.11 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
இதற்கு முக்கிய காரணம் ஈரான் தனது முக்கிய இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க முயன்றால், அமெரிக்கா பெரும் பதிலடி கொடுக்கும் என்றும் கடந்த ஞாயிற்றுகிழமையன்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா ஈரான் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலையானது தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
ரூபாய் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.90 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 70.59 அமெரிக்கா டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டு சந்தையும் வீழ்ச்சி கண்டே காணப்படுகிறது. இதன் எதிரொலி இந்திய சந்தையில் உள்ள சில பங்குகளும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
இந்திய சந்தை வீழ்ச்சி
அதிலும் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் (2.30 மணியளவில்) 807 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,656 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 239 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,986 ஆகவும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.04 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
எண்ணெய்க்காக அதிக செலவு
இந்தியா எரிபொருளுக்காக அதிகளவில் இறக்குமதியையே நம்பி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்காக அதிக செலவு செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி காணும் என்ற அனுமானத்தினாலேயே ரூபாயின் மதிப்பு, மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
பத்திர லாபம் வீழ்ச்சி
மேலும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மையால் ஈக்விட்டி சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இது தவிர 10 வருட பத்திர லாபம் 6.55 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது ஆக, இது போன்ற பல காரணிகள் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications