புதிய வந்தே பாரத் ரயில்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட்டத்தை பாதிக்கும் என ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தேஜஸ் ரயில்கள் குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் தேஜாஸ் ரயில் பயணிகள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று ஐஆர்சிடிசி தனது கவலையை தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பிரபலமானால் தேஜஸ் ரயிலை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி கவலை
மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மற்றும் வழித்தடத்தின் மோதல் குறித்து ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இரயில்வேயின் பிரீமியம் கார்ப்பரேட் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே வந்தே பாரத் ரயில் பாழடிக்கின்றது என்றும் ஐஆர்சிடிசி கூறியது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் ரயில்கள் இயங்கி வரும் அதே வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்கினால், தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கத்தை மோசமாக பாதிக்கும் என்று ஐஆர்சிடிசி ரயில்வே வாரியத்திற்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
எதிர்ப்பு ஏன்?
வந்தே பாரத் ரயிலுக்கு ஐஆர்சிடிசி எதிரி இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தேஜஸ் ரயில் இயங்காத வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கலாம் என்றும், ஒரே வழித்தடத்தில் இரண்டு ரயில்களும் இயங்கினால் வந்தே பாரத் ரயிலுக்கு மட்டுமே பயணிகள் முக்கியத்துவம் தருவார்கள் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
அகமதாபாத் - மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ்
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அகமதாபாத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:05 மணிக்கு மும்பையை வந்தடையும். மறுபுறம் மும்பை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:10 மணிக்கு அகமதாபாத்தை சென்றடைகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்த நிலையில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அகமதாபாத்தில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு மும்பையை சென்றடையும். மற்ற திசையில், மும்பை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு இரவு 9:05 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.
பாதிப்பு
இவ்வாறு ஒரே வழித்தடத்தில் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கினால் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வந்தே பாரத் ரயில்களை தான் பயணிகள் தேர்வு செய்வார்கள் என்றும், இதனால் தேஜஸ் ரயில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications