இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி உடன் சேர்ந்து சுமார் 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த மெகுல் சோக்ஸி இந்தியாவை விட்டு இரவோடு இரவாகத் தப்பியோடிய நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்பு கிரீபியன் நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாகத் தகவல் கிடைத்தது.
இதன் மூலம் இந்திய அரசு மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு அழைத்து வர அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வரும் வேளையில் தற்போது மெகுல் சோக்ஸி காணவில்லை எனப் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13600 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டி உண்மை வெளியாவதற்கு முந்தைய நாள் இரவில் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு தப்பியோடி கிரீபியன் நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியில் குடியுரிமை பெற்று 2018 முதல் வாழ்ந்து வருகிறார்.
மெகுல் சோக்ஸி காணவில்லை
இந்நிலையில் மெகுல் சோக்ஸி-ஐ இந்தியாவிற்கு நாடு கடத்தவும், இன்டர்போல் கைது செய்யும் உத்தரவை விடுத்துள்ள வேளையில் மே 23ஆம் தேதி மாலை 5.15 முதல் மெகுல் சோக்ஸி காணவில்லை என அவரது வழக்கறிஞர் வழக்கறிஞர் ஆன்டிகுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கார் மட்டும் கிடைத்தது
இந்தப் புகாரில் 62 வயதான மெகுல் சோக்ஸி மே 23ஆம் தேதி தனது காரில் விட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்பு அவர் காணவில்லை என மே 24ஆம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் தேடதல் பணியில் இறக்கிய ஆன்டிகுவா காவல் அதிகாரிகள் மெகுல் சோக்ஸியின் கார்-ஐ மட்டும் கண்டு பிடித்துள்ளனர்.
மெகுல் சோக்ஸியின் குடியுரிமை
2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா அரசுகள் மெகுல் சோக்ஸியின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான பணிகளைத் துவங்கியது, இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார் மெகுல் சோக்ஸி. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் அவர் காணாமல் போய் உள்ளார்.
ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாடுகள்
இந்நிலையில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகையில் மெகுல் சோக்ஸி கியூபாவில் இருக்கும் தனது பண்ணைவீட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் மெகுல் சோக்ஸி கியூபா நாட்டிலும் குடியுரிமை பெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.
கியூபா-விற்குத் தப்பித்த மெகுல் சோக்ஸி
இந்தியா - கியூபா இடையே extradition treaty என்பதால், மெகுல் சோக்ஸி கியூபாவில் திட்டமிட்டுக் குடியுரிமை பெற்று ஆன்டிகுவா மற்றும் பார்புடா அரசின் நெருக்கடியைச் சமாளிக்க இந்நாட்டில் இருந்து கியூபாவிற்குத் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மேலும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியாகக் கூறி வருகிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications