கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டு எடுக்க மத்திய நிதியமைச்சகம் அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் மூலம் பாதிப்படைந்த துறை சார்ந்த நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று வர்த்தகத்தை மீட்டு எடுக்க உதவியது.
இத்திட்டம் மூலம் பல நிறுவனங்கள் திவாலாவதில் இருந்து தப்பித்து மீண்டு வந்தது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை மேம்படுத்தவும் பயன்பட்டது மறக்க முடியாது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது முக்கியமான துறைக்கு 50000 கோடி ரூபாயை புதிதாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ECLGS திட்டம்
ஹாஸ்பிடாலிட்டி, பயணம் மற்றும் சுற்றுலா துறைகளுக்காக ரூ.50,000 கோடி மதிப்பிலான நிதியை அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு (ECLGS) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பல துறைகளை மீண்டு வந்தாலும் ஹாஸ்பிடாலிட்டி, பயணம் மற்றும் சுற்றுலா இன்னும் முழுமையாக மீண்டு வர முடியாமல் உள்ளது.
5 லட்சம் கோடி
இந்த நிலையில் இத்துறைக்கான ஒட்டுமொத்த ஈசிஎல்ஜிஎஸ் ஒதுக்கீடு 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து தற்போது ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
அனுராக் தாக்கூர்
பயணம், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைக்கான அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் வரம்பை கூடுதலாக ரூ.50,000 கோடியாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார். மேலும் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்காக, கூடுதல் உத்தரவாதம் வழங்கப்பட இந்த ஆண்டு 7,500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும் கூறினார்.
கடன்கள்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை, ECLGS இன் கீழ் சுமார் ரூ.3.67 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்ள இத்துறைக்கான ECLGS ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications