பெரும் கடனில் தத்தளித்து வந்த இந்தியாவின் மிகப்பெரிய ஏர் லைன்ஸ் சாம்ராஜ்ஜியத்தினை, 68 ஆண்டுகளுக்கு பிறகு டாடா குழுமம் மீண்டும் தன் வசம் எடுத்து சென்றது.
இது ஏர் இந்தியாவின் எதிர்காலத்தினை பிரகாசமாக்கும் என்று, கையகப்படுத்தலின்போது பலதரப்பினரும் தங்களது கருத்துகளை கூறினர்.
தற்போது அதனை மேலும் மெருகேற்றும் விதமாக எமிரேட்ஸின் தலைவர் டாடாவுக்கு புகாழாரம் சூட்டியுள்ளார்.
வேறு யாராலும் செயல்பட வைக்க முடியாது?
இந்தியாவில் ஒரு விமான நிறுவனம் செயல்படுவது அவ்வளவு எளிதானது அல்ல. டாடா குழுமத்தினால் ஏர் இந்தியாவினை செயல்பட வைக்க முடியாவிட்டால், நாட்டில் வேறு யாராலும் செயல்பட வைக்க முடியாது என எமிரேட்ஸ் தலைவர் டிம் கிளார்க் கூறியுள்ளார்.
இது ஒரு தங்க சுரங்கம்
ஏர் இந்தியா யுனைடெட் ஏர்லைன்ஸ் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும். அது அதன் உள்நாட்டு சந்தை மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கு வெளியேயும், உள்ளேயும் செல்லும் பொருளாதார நடவடிக்கைகளின் அளவு காரணமாக இது பெரிதாக இருக்க வேண்டும். இது ஒரு தங்க சுரங்கம் என கிளார்க் கூறியுள்ளார்.
நல்லதொரு எதிர்காலம்
ஏர் இந்தியா தற்போது தோராயமாக 128 விமானங்களைக் கொண்டுள்ளது. சிகாகோவை தளமாகக் கொண்ட சிகாகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் 860 ஒற்றைபடை விமானங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அது மிகப்பெரியது. இது வளர்ந்து வரும் நாடாக இருந்து வருகின்றது. ஆக ஏர் இந்தியாவுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை சூசகமாக கிளார்க் கூறியுள்ளார்.
இது தான் சிறந்த விஷயம்
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஏர் இந்தியாவினை டாடா குழுமம் கையகப்படுத்தியது. டாடா ஏர் இந்தியாவினை கையகப்படுத்தியது தான் சிறந்த விஷயம் என நான் நினைக்கிறேன். இந்தியாவில் விமான எரிபொருள் விலை மிக அதிகம். அரசாங்கம் அதிக வரி விதிக்கிறது. ஆக இந்திய சந்தையில் செயல்படுவது கடினமான ஒன்று. எனினும் வணிக புத்தசாலித்தனத்துடன் டாடாவால் அதனை செயல்படுத்த முடியும். இதனை வேறு யாராலும் முடியாது.