டில்லி: இன்று சர்வதேச மகளிர் தினம். இந்த் தினத்தை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வழிமுறைகளில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்தியாவின் மத்திய அரசும் ஒரு விதமாக தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று அனைத்து ஏ எஸ் ஐ. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலும் பெண் பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். என்கிற அறிவிப்பை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் நேற்று அறிவித்து இருந்தது.

இதில் உத்திரப் பிரதேச மாநிலத்தின், ஆக்ரா நகரத்தில் உலகிலேயே அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளமான தாஜ்மஹால் கூட அடக்கமாம்.
"பண்டைய நினைவுச் சின்னங்கள் & தொல்பொருள் தளங்கள் விதிகள், 1959-ன் கீழ், விதி 6-ஐப் பயன்படுத்தி, ஏ எஸ் ஐ அமைப்பின் இயக்குநர். இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் மார்ச் 8 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மத்திய அரசின் கீழ் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு, பெண் பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது" என புதுதில்லியில் உள்ள ஏ.எஸ்.ஐ தலைமையகத்தில் இருந்து சுற்றறிக்கை வெளியாகி இருக்கிறது.
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் "ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் பெண்களை கடவுளாக மதிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது" என ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்திடம் சொல்லி இருக்கிறார்.
"இந்த மகளிர் தினம் அன்று ஏ.எஸ்.ஐ நினைவுச் சின்னத்திற்கு வரும் பெண்களுக்கு, இலவச நுழைவு அளிப்பதன் மூலம் எங்கள் மரியாதையை வெளிப்படுத்துகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்.
எனவே டெல்லியில் இருக்கும் செங்கோட்டை தொடங்கி குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை, தாஜ் மஹால், கோனார்க்கில் இருக்கும் பிரசித்தி பெற்ற சூரியனார் கோவில், தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரம், எல்லோரா குகைகள், கஜுராஹோ நினைவுச் சின்னங்கள், அஜந்தா குகைகள் போன்ற நினைவுச் சின்னங்களுக்கு இன்ரு வரும் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்படுவார்கள். இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications