மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மாநிலங்களுடன் செய்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், மாநில அரசுக்கான நவம்பர் மாத வரி பகிர்வை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலின் பெயரில் மத்திய அரசு நவம்பர் மாதம் கூடுதலாக 47,541 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
உள்கட்டுமான மேம்பாடு
இதன் மூலம் நவம்பர் மாதம் மட்டும் மாநில அரசுகள் சுமார் 95,082 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இந்தக் கூடுதல் நிதியை மாநில அரசுகள் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிகிறது.
14 தவணை
பொதுவாக மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை 14 தவணையாக மாநில அரசுகளுக்கு ஒரு வருடத்தில் பிரித்துக் கொடுக்கும், இதில் மார்ச் மாதம் மட்டும் 3 தவணை சேர்த்து அளிக்கப்படும்.
நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நிதித்துறை செயலாளரை நவம்பர் 22ஆம் தேதி மார்ச் மாதத்திற்கான ஒரு தவணையைச் சேர்த்து நவம்பர் மாதம் 2 தவணையாகக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
95,082 கோடி ரூபாய்
இதன் மூலம் நவம்பர் 22ஆம் தேதி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுமார் 95,082 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் 3 தவணைக்குப் பதிலாக 2 தவணைக்கான தொகையை மட்டுமே பெற உள்ளது.
வரி வருமானம்
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான அதீத வரி விதிப்பால் அதிகளவிலான வரியை வசூலித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசு சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்துடன் உள்ளது.
பெட்ரோல், டீசல்
மேலும் தற்போது பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது மூலம் வரி வருமான அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது என நிதித்துறை செயலாளர் டிவி.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி
தற்போது ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் மத்திய அரசு வசூலித்த வரித் தொகையில் 41 சதவீத தொகையை 14 தவணைகளாக மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கிறது. நவம்பர் மாதம் 2 தவணைகளை அளிக்கப்படும் காரணத்தால் மாநில அரசுகளிடம் அதிகளவிலான பணப்புழக்கம் உருவாகும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications