மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மாநிலங்களுடன் செய்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், மாநில அரசுக்கான நவம்பர் மாத வரி பகிர்வை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலின் பெயரில் மத்திய அரசு நவம்பர் மாதம் கூடுதலாக 47,541 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
உள்கட்டுமான மேம்பாடு
இதன் மூலம் நவம்பர் மாதம் மட்டும் மாநில அரசுகள் சுமார் 95,082 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இந்தக் கூடுதல் நிதியை மாநில அரசுகள் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிகிறது.
14 தவணை
பொதுவாக மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை 14 தவணையாக மாநில அரசுகளுக்கு ஒரு வருடத்தில் பிரித்துக் கொடுக்கும், இதில் மார்ச் மாதம் மட்டும் 3 தவணை சேர்த்து அளிக்கப்படும்.
நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நிதித்துறை செயலாளரை நவம்பர் 22ஆம் தேதி மார்ச் மாதத்திற்கான ஒரு தவணையைச் சேர்த்து நவம்பர் மாதம் 2 தவணையாகக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
95,082 கோடி ரூபாய்
இதன் மூலம் நவம்பர் 22ஆம் தேதி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுமார் 95,082 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் 3 தவணைக்குப் பதிலாக 2 தவணைக்கான தொகையை மட்டுமே பெற உள்ளது.
வரி வருமானம்
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான அதீத வரி விதிப்பால் அதிகளவிலான வரியை வசூலித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசு சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்துடன் உள்ளது.
பெட்ரோல், டீசல்
மேலும் தற்போது பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது மூலம் வரி வருமான அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது என நிதித்துறை செயலாளர் டிவி.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி
தற்போது ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் மத்திய அரசு வசூலித்த வரித் தொகையில் 41 சதவீத தொகையை 14 தவணைகளாக மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கிறது. நவம்பர் மாதம் 2 தவணைகளை அளிக்கப்படும் காரணத்தால் மாநில அரசுகளிடம் அதிகளவிலான பணப்புழக்கம் உருவாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications