டெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு இது போதாத காலமே. சொல்லப்போனால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சமாளித்து கொண்டு இருக்கின்றன.
அதிலும் ஏஜிஆர் பிரச்சனைகள் தலைதூக்கிய பின்னர், வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவையை தொடர முடியுமா என்ற நிலைக்கே சென்றுள்ளது.

அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவையும் நிராகரித்தது.
இதனால் வோடபோன் ஐடியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வெடித்து சிதறியது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் இரு தவணைகளாக 3,500 கோடி ரூபாய் நிதியினை செலுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் மீதி தவணையை செலுத்த 15 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 1.47 லட்சம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. 14 வருட போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தான் ஒரு முற்றுபுள்ளி வைத்தது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னரே பெரிது நஷ்டம் கண்டுள்ள இந்த நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரிதும் நிலைகுலைந்து போயின. அதிலும் வோடபோன் நிறுவனம் ஏற்கனவே பல ஆயிரம் கோடி நஷ்டம் கண்ட நிலையில், இது பெருத்த அடியாகவே உள்ளது.
தொலைத் தொடர்பு துறையின் அறிக்கையின் படி, வோடபோனுக்கு சுமார் 53,000 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வோடபோன் நிறுவனமோ 23 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா தனக்குள்ள ஜிஎஸ்டி நிலுவை தொகை 8,000 கோடி ரூபாயை கழித்துக் கொள்ள வேண்டும் எனவும் வோடபோன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மொத்த வருவாயில்; 8% ஆக உள்ள உரிமக் கட்டணத்தை 3% ஆகக் குறைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications